இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விளையாட்டாக சொல்கிறேன் #19

ஏதோ ஒரு கடிதம் வந்ததாக அப்பா சிரித்துக்கொண்டே என்னிடம் கொடுத்தார். யார் வேண்டுமானாலும் படித்துவிடக்கூடிய அளவிற்கு திறந்தே இருக்கும் மஞ்சள் நிற சிறு காகிதத்தில், ஒரு பக்கத்தின் வலது மூலையில், சிரித்துக்கொண்டே இருந்த காந்தித்தாத்தாவின் கீழே, என்பெயரிட்டு முகவரி எழுதப்பட்டிருந்தது. அதே பக்கத்தின் மறுமுனையில் கீழே அனுப்பியவர் முகவரியுடன், மேலே நீண்டிருந்தது முதல்பக்க எழுத்துகளின் தொடர்ச்சி. 'அன்புள்ள ஜிஎஸ் க்கு, அன்புடன் எஸ்எஸ்பி எழுதிக்கொண்டது, நலம் நலமறிய ஆவல். ஜிஎஸ்பி கடிதம் எழுதினானா, விடுமுறை எப்படி கழிகிறது', என நீண்டுகொண்டே போன சொற்கள், அன்புடன் எஸ்எஸ்பி என்று முடிந்திருந்தது. நான் படிக்க படிக்க, பின்னணி இசை போல சிரித்துக்கொண்டே இருந்தார் பெரியண்ணன். அவர் முன்பே அந்த கடிதத்தை படித்துவிட்டார் போல. அனைத்து பெயர்களுமே இனிசியலாக மட்டுமே குறிப்பிடப்பட்டதை நினைத்து சிரித்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். ஆனால், ரிமோட்டிலிருந்து பாய்ந்து செல்லும் கண்ணிற்கே புலப்படாத அந்த அகச்சிவப்பு கதிரை, தொலைக்காட்சி பெட்டி மட்டும் கண்டுகொள்வதைப்போல, அந்த கடிதத்துள் பதுக்கப்பட்டிருந்த நண்பனின் அன்ப

விளையாட்டாக சொல்கிறேன் #18

வாழ்கையை ஒரு பயணமாகத்தான் பெரும்பாலும் உருவகித்துக்கொள்கிறோம் காரணம், நேரமென்ற நான்காது பரிமாணத்தை நம்மின் முப்பரிமாண காட்சிகள் கடந்துசெல்வதால்தான். ஆனால் நம் வாழ்வு, அந்த நான்காவது பரிமாணத்தில் முன்னோக்கி மட்டுமே செல்லப் பழக்கப்பட்டிருக்கிறது. அதாவது முன்னோக்கி பாய்ந்து செல்லும் ஒரு தொடர்வண்டியைப்போல. அந்த வாழ்வென்ற தொடர்வண்டியின் கடைசிப்பெட்டியில் பயணப்படுவதுதான் நம்மின் நினைவுகள். அது முன்னோக்கி செல்லும் தொடர்வண்டியுடனேயே இணைந்திருந்தாலும், பின் கடந்துவந்த பாதையையும் பார்த்துக்கொண்டேதான் வரும். வாழ்வை தாங்கி நகர்த்திசெல்லும் நேரமென்ற இரும்பு பாதையை அசையாது தாங்கி நிற்கும் அன்பென்ற சிறுகற்கள் பாதைநெடுகிலும் இறைந்து கிடக்குமே, அந்த அன்பு செலுத்தியவர்கள் பலராலும் கட்டமைக்கப்பட்டதுதான் இந்த வாழ்வென்ற பயணம். பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த அந்த சிறுவனான என்னை அடித்தவண்ணம் தரதரவென கப்பி சாலையில் இழுத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தார் அப்பா. சிங்கபூரிலிருந்த வந்திருந்த மாடிவீட்டு தாத்தாதான், கடவுளாக என்னைக் காத்து பள்ளிக்கு கொண்டுவந்து சேர்த்திருந்தார். பல நாட்களாக பள்ளிக்கு செல்லவே கசந்த நிலையி

விளையாட்டாக சொல்கிறேன் #17

பழைய மரத்தாலான கேன்வாஸ் ரக சாய்வு நாற்காலி ஒன்றில் கால் மீது கால் போட்டு, நடு வகுடெடுத்த தலையில் வெள்ளி இழைகள் முட்டிமோதி மேலெழுந்து அசைந்துகொண்டிருக்க, வலது கை கடிகாரம் ஆடும் படி கையை அசைத்து அசைத்து எதையோ நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் தாத்தா. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, கீற்று மட்டைகள் வேய்ந்த மாடியில், தென்னங்காற்றில் கரைந்துகொண்டே இந்த காட்சிகள் நடந்திருக்கலாம் என அவதானிக்கிறேன். அவரின் பேச்சின் இடையே, அவர் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியை அவரின் நண்பர்கள் பெரிதாக கவனித்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அவர் இறந்த பிறகு அவர் அமர்ந்திருந்த அந்த சாய்வு நாற்காலி அவரைப்பற்றி நினைவுகளை உரக்க சொல்லிக்கொண்டே இருந்தது. 'பெரும்பாலும் உங்க தாத்தா, கேன்வாசுலதான் தூங்குவார், அப்படி தூங்கயில நாய் கட்டிலுல தூங்கும், தாத்தா கட்டிலுல தூங்குனார்னா, நாய் கேன்வாசுல படுத்திருக்கும்' என்று வடக்கு வீட்டு பெரிய அண்ணன், அந்த கேன்வாசிற்கும், தாத்தாவிற்கும் இடையே நாயின் அன்பு எப்படி பரவிக்கிடந்தது என்பதை பலதடவை சொல்லியிருக்கிறார். எத்தனை திருமண பேச்சுகளையும், சொத்து தகராற

விளையாட்டாக சொல்கிறேன் #16

நரிகள் ஊளையிடும் சத்தம் காதை பிளந்துகொண்டிருந்தது. தினம்தினம் ஆடுகளையோ, கோழிகளையோ இழப்பதே மக்களின் பெரும் இடையூறுகளாக இருந்தன. மனிதனின் மூதாதையர்களான குரங்குகள் பல இன்றும் குரங்குகளாக இருப்பது போலவே, நாய்களின் மூதாதையர்களான நரிகள் அப்படியே கொடுங்குணத்துடந்தான் இருக்கின்றன. பொழுதுபோக்கிற்காகவே வேட்டையாடும் அந்த கொடிய நரிகளை, உலக சமூகத்தில் மங்கோலியர்கள் மட்டுமே தன் குலச்சின்னமாக தொழுதனர் என்பதை பிற்பாடு ஓநாய்குலச்சின்னம் (wolf totem in english written by Jiang Rong, தமிழில் சி. மோகன்) புத்தகத்தில் படித்துதான் தெரிந்துகொண்டேன். காரணம், அவைகள் மங்கோலியாவின் 'புல்வெளி பகுதிகளை', புற்களை உண்டு வாழும் முயல்கள், மான்களிடமிருந்து காக்கின்றன என்பதுதான். ஆனால் அதில் மற்றுமொரு பயனும் இருந்திருந்தது அந்த மஞ்சள் நிற மங்கோலியர்களுக்கு. இந்த உலகத்தையே ஆட்சி செய்த மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான், போர்முறை தந்திரங்களை இந்த ஓநாய்களிடம்தான் கற்றிருந்தார். அதனால்தான் இந்த உலகத்தையே வென்றிருக்க முடிந்தது செங்கிஸ்கானால். இயற்கையாக படைக்கப்பட்ட எதுவும் எதோவொரு வகையில் மனிதனுக்கு பயனுள்ளவைகளாகவே இருக்கின

விளையாட்டாக சொல்கிறேன் #15

வாழ்க்கை முழுவதுமான நினைவுகளை எடுத்து சல்லடை கொண்டு சலித்தால், பெரும்பாலும் சல்லடையில் எஞ்சும் பெரும் நினைவுகளாக நிற்பது நாம் மேற்கொண்ட பயணங்கள் தான். மனிதன் தன் கடைசிப் பயணத்தை தவிர மற்ற அனைத்தையும், வேடிக்கையுடன், ரசித்துக்கொண்டேதான் பயணிக்கிறான். பயணங்கள் ஒரு தொலைக்காட்சி தொடரை விளம்பர இடைவேளை இன்றி, ஒரேயடியாக பார்ப்பதுபோலொரு உணர்வை கொடுக்கவல்லது. அந்த தொடரை காண்பிக்கும் சாளரம், பேருந்தின் சன்னலின் அளவுடையதாகவோ, உந்துருளி பின் இருக்கையிலிருந்து பார்க்க முடிந்த 180 டிகிரி அளவுடையதாகவோ, ஒருசிலருக்கு மகிழுந்தின் சன்னல் அளவுடையதாகவோ இருக்கலாம். பல வேளைகளில், திரையை மறைக்கும் விதமாக, நமக்கு முன்பே வந்து சன்னலோர இருக்கையை பிடிக்க ஒருவர் தயாராக இருக்கலாம். இருந்தும் எக்கி பார்த்த காட்சிகள் நீங்கா நினைவுகளுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எங்கோ, ஏதோவொரு பயணத்தில் பார்த்த துள்ளியாடும் ஆட்டு குட்டிகளை பார்த்து மனம் துள்ளிக் குதித்திருக்கும், என்றோ சாளரம் வழி கண்டிருந்த சிறு சண்டை சச்சரவுகள் நம்மை பாதித்திருக்கும். நானா அவனா ஒரு பங்குடு பண்ணிட்டு வரேனென பயணப்பட்டவர்கள், பயண

விளையாட்டாக சொல்கிறேன் #14

எங்கோ கேட்ட குரல் அது, சற்றே உரக்க கேட்கிறது. 'அய்யோ கொடும்பாவி, ஆகாச சக்களாத்தி, சுக்கீரம் பொண்டாட்டி, சுக்கீரன விட்டுடடி' என்ற அந்த ஒப்பாரி, பாப்புவின் குரல்தான். உண்மையில் ஒரு ஒப்பாரிப்பாடல், மனிதனின் மனதை மாற்றவல்லது, துக்கத்தையும் எளிதில் கடக்க துணைபுரிவது. கையறுநிலையை பாடலாக வடித்து இசைப்பது என்பது ஒரு பெரிய இலக்கிய வடிவம். பாரியின் இறப்பையும், அதியமானின் இறப்பையும் விளக்கும் சங்க இலக்கியங்கள், கையறுநிலை பாடல்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன. அப்படிப்பட்ட ஒப்பாரியை உலகளவில் எடுத்துச்செல்ல நம்மவர்கள் தவறிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்.  மழை வேண்டி கொடும்பாவி எரிப்பது கிராமங்களில் வழக்கமான ஒன்றுதான். பாப்புவின் குரலைத்தான் பெரும்பாலான வேளைகளில் கொடும்பாவி கேட்டுக்கொண்டே எரிந்து மகிழும். மூளை சுருக்கங்களை ஒத்த தோல்கள், மேலாடை அணியாது, கைத்தறி புடவையால் மறைக்கப்பட்ட உடல், இடுப்பு சுருக்கு பை, கனிவான சொற்கள், அளவில்லா அன்பு என தனிப்பெரும் அடையாளம் கொண்ட பாப்பு ஒரு அமைதிக்கான நோபெல் பரிசுக்கு தகுதிபெற்றவர். பாப்புவிற்கு உழவன் மீதும், உழவு மீதும் அவ்வளவு பற்று. உழவின் மீது உழவனுக்க

விளையாட்டாக சொல்கிறேன் #13

'என்னங்கிறேன் நிக்கிற, உக்காரவேண்டிதானே, நீயே பேர புள்ளைகள எடுத்தப்புறமுமா எனக்கு மரியாத குடுப்ப, எல்லாம் மனசில இருந்தா போதுங்கிறேன்!' என எப்பொழுதுமே என் அப்பாவிடமும், பெரியப்பா, சித்தப்பாக்களிடமும் என் தாத்தா கேட்பது வாடிக்கை. சனி மூலையில் திரண்டு வரும் மேகம் கூட சிலவேளைகளில் மழையாக மாறாமல் காற்றுடன் சலனப்பட்டு களைந்து சென்றுவிடலாம், ஆனால் அப்பாவோ, அப்பாவின் உடன்பிறப்புகளோ என்றுமே தாத்தாவின் முன்பு இருக்கையில் அமர்ந்ததாக சரித்திரமில்லை. தாத்தா ஒரு வாழ்க்கை நெறி தெரிந்த ஒரு வித்தைக்காரர். முயற்சியால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிட முடியாது, கூடவே சிக்கனமும் தேவை என்பதை உணர்ந்தவர். அவரின் தந்தை தன் சொத்துகள் அனைத்தையும் இழந்து ஒன்றுமில்லாமல் குடும்பத்தை இவரிடம் ஒப்படைத்த நேரத்தில், வாரத்திற்கு நிலத்தைப் பிடித்து, தம் மகன்கள் அனைவரையும் வரிசைகட்டி ஏர்பிடிக்க வைத்து, சிறிது சிறிதாகத்தான் சொத்தை சேர்த்திருக்கிறார். என் அப்பாவுக்கு முன் இருவரையும், அவருக்கு பின் ஐவரையும் பெற்ற இரும்புப்பெண்மணியான பாட்டி ஒருநாள் இறந்துவிடவே, அத்தை ஒருவரைத்தவிர பெண் என்று வீட்டில் யாருமில்லாத சூழ

விளையாட்டாக சொல்கிறேன் #12

காலை நான்கு மணி இருக்கும், கூட்டமாக தூங்கிக்கொண்டிருக்கும் எங்களை, ஏதோவொரு கனத்த குரல் தட்டித் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது. அரைகுறை தூக்கத்துடன் விழிகள் திறந்தும் நோக்காத கண்களுடன், காலைக் கடமைகளை வலுக்கட்டாயமாக செய்துவிட்டு, முழுக்கை வெள்ளை சட்டையை முட்டிக்கை தாண்டி மடித்து, இடுப்பில் நிற்காத காக்கி அரைக்கால் டவுசரை பட்டையான பெல்ட் கொண்டு முடிந்துகொண்டு, தலையில் நிற்காத அந்த குல்லாவை பிடித்துக்கொண்டே, இரண்டு கிலோமீட்டர் மூங்கில் தடி கையிலேந்தி ஓடிக்கொண்டிருந்தோம். புத்தர் விரும்பியதுபோல் அமைதி வடிவில் மனிதனைக் காணவேண்டுமானால், மனிதனின் சிலையை மட்டும்தான் காணமுடியும். அப்படி ஆரஞ்சு நிறத்தில் அமைதியாய் நின்றிருந்த விவேகானந்தர் சிலை முன்பு நீண்டிருந்த மைதானத்தில், அந்த மூங்கில் கம்பை முன்னும் பின்னும் சுற்றி பின் பல உடற்பயிற்சிகளை உடற்பெயர்ச்சி இல்லாது செய்துவிட்டு, காலை வெயில் கண்ணை எட்டியதும் வேதாரண்யம் கோயிலுக்கு கால் நடையாக சென்றிருந்தோம். கோயில் சுற்றுப்பாதையில் நாமாக எந்த குப்பையும் இடாது, இருக்கும் குப்பைகளை சுத்தப்படுத்தி சுவச் பாரத்தாக்கிவிட்ட பெருமிதப்புடன் கோயில் தளத்திற்குள

விளையாட்டாக சொல்கிறேன் #11

கிராமங்களின் பின்புலம் கொண்ட, என் வயதொத்த எவருக்கும், தோசை விளையாட்டை ஆடிய அனுபவம் இருக்கும். அதில், அனைவரும் வட்டமாக அமர்ந்து, தரையில் புறங்கை படுமாறு வைத்திருக்க, ஒருவர் மட்டும் தீமூட்டி, தோச கல்லு வையி, எண்ண தீத்து, தோச ஊத்து என வெர்ச்சுவல் ரியாலிட்டியில் தோசை ஊத்தி முடிப்பார். பின், ஊத்தியவர் 'வெந்துச்சா வேகலையா' என கையை கிள்ளி கேட்க, அனைவரும் 'வேகலை' என பதிலளிப்பார்கள்.. அடுத்தமுறை மீண்டும் கேட்க, 'வெந்துடுச்சி' என பதிலளிக்க, அனைத்து தோசைகளையும் அடுக்கி வைப்பதுபோல் பாவனை காண்பித்துவிட்டு, அந்த தோசை ஊற்றியவர் குளிக்க போறேன் எனக் கூறி, திரும்பி பார்த்துவிட்டு உட்கார்வார்.. ஆனால் அங்கு தோசை எதுவும் இருக்காது. அதைக் கண்டு அதிர்ந்து போகும் அவர், மற்றவர்களிடன் இப்படித்தான் கலந்துரையாடுவார், தோசை எங்கே?  காக்கா தூக்கிட்டு போச்சி, தூக்கிட்டு போன காக்கா எங்கே? கெளையில உக்காந்துருக்கு உக்காந்த கெளை எங்கே? மரத்துல இருக்கு அந்த மரமெங்கே? வெட்டி வெறகாக்கியாச்சி வெட்டுன வெறகெங்கே? அடுப்பெரிச்சாச்சி அடுப்பெரிச்ச சாம்பலெங்கே? பாத்திரம் கழுவியாச்சி கழுவுன தண்ணி எங்கே? மாட்ட

விளையாட்டாக சொல்கிறேன் #10

ஒரு இரண்டடி நீளம் கொண்ட கம்பை கொண்டு, இருபுறமும் கூர்மையாக்கப்பட்ட ஒரு ஜான் அளவுள்ள சுறு குச்சியை அடித்து விளையாடுவதுதான் அந்த கிரிக்கெட்டின் முன்னோடியான கிட்டிபுள்ளு. பல ஊர்களிலும் பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த ஆட்டம் ஒரு வீர விளையாட்டென்றே மதிப்பிடலாம். ஏனென்றால் விளையாடும் யாருக்குவேண்டுமானாலும் அடிபட நேரிடலாம், மைதானத்தில் கிடைக்கவில்லை என்றாலும் வீட்டில் கட்டாயம் கிடைக்கும்! கிட்டிபுள்ளு பல மாதிரிகளாக விளையாடப்பட்டாலும், எங்கள் பகுதியில் விளையாடப்படுவது இந்த வகைதான். ஒரு சிறு குழி தோண்டி, அதன் குறுக்கில் முதலில் அந்த கூர்மையாக்கப்பட்ட புள்ளை வைத்து, எதிர் வீரர்கள் நிற்கும் திசைக்கு எதிர் திசையாக திரும்பி, முகம் முட்டியை தொடும் வண்ணம் குனிந்து, கிட்டியை வைத்து ஆளில்லா பக்கம் நெம்ப வேண்டும். உந்தப்பட்ட புள்ளை யாரும் பிடித்துவிட்டால், ஆடியவர் அவுட், இல்லை என்றால், எங்கேனும் கீழ்விழுந்திருக்கும் புள்ளை எடுத்து எங்கிருந்து வந்ததோ அந்த இடம் நோக்கி எறிய வேண்டும். நெம்பியவர், கிட்டியை கையில் வைத்துக்கொண்டு ஷேவாக் போல கண்ணை மூடிக்கொண்டு எதிர் வரும் புள்ளை அடிப்பார். அது அடிபடாமல் அந்த க

விளையாட்டாக சொல்கிறேன் #9

கோடையென்றாலே சில்வண்டுகள் துவங்கி, காளையர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சிதான். காரணம் ஊரில் நடத்தப்படும் கபடிப்போட்டி. நான்கைந்து வயல் வெளிகளில் நீட்டிக்கொண்டிருக்கும் நெல் தாள்களை, மடித்து, ஆட்டம்கண்டு போன புடியின் நுனியில் தொங்கியிருக்கும் மண்வெட்டியை வைத்தே சமப்படுத்தி, பலர் வீட்டு கயிறென்பதால், மீட்டு கொடுக்க ஏதுவாக சுருக்கு முடிச்சுகளிட்டு, அதனை நான்கு பக்கங்களிலும் கட்டி, யார்வீட்டிலோ வெள்ளையடிக்க வைத்திருந்த சுண்ணாம்பினை வைத்து தொடு கோடுகளையும், பார்வையாளர்கள் தொடக்கூடாத கோடுகளையும் வரைந்து, மைக்கு செட்டுகள் கட்டப்பட்டு, கொடுத்தது போக மீதமிருக்கும், முதல் பரிசு 1000, இரண்டாம் பரிசு 500 என குறிப்பிடப்பட்டிருக்கும் துண்டறிக்கைகளையெல்லாம் ஊர்சாலையில் பரப்பிவிட்டு, பல ஊர்க் காளையர்களை ஒன்றிணைத்து நடைபெறும் அந்த ஆட்டம் இன்றைய கேபிஎல்-ன் முன்னோடி என்றால் மிகையாகாது. உலகத்தரம் வாய்ந்த வர்ணனையாளர்கள் அன்று ஊரில் இருந்திருந்தார்கள், தம்பி பார்த்திபனின் அப்பா உட்பட. விளையாடும் அணிகளைத்தவிர்த்து, ஏனைய அணிகள் யாவும், ஊர் சாலைகள் முழுதும் வார்மப் என்ற பெயரில் அலைந்து திரிந்து பாதி உயிருடன்தான

விளையாட்டாக சொல்கிறேன் #8

மிதிவண்டியில், மதிய உணவு எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் கதையடித்துக்கொண்டே செல்லலாமென்ற ஒற்றைக் கனவை நெஞ்சில் சுமந்து, எட்டாம் வகுப்பு தேர்வுகளை மாங்கு மாங்கென எழுதியாகிவிட்டது. இப்படி, ஒன்பதாம் வகுப்பிலிருந்து படிக்க மிதிவண்டியில் தகட்டூர் செல்லவேண்டுமே என்றொரு ஆர்ப்பரிப்பில், பல ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டு மூன்று பேரீச்சை பழங்களுக்கு சற்றும் சளைத்திராத சைக்கிள் பிடித்த துரு ஒன்றில் குரங்கு பெடல் போட்டு கற்றுக்கொண்ட வித்தைகள் பலன்கொடுக்க தொடங்கியிருந்தன. எளிதில் வழுக்கிவிடும் கைப்புடிகளில் செருகப்பட்ட பளபளக்கும் ஞெகிழி இழைகள், அடம்பிடித்து அப்பாவால் சரிசெய்துவிக்கப்பட்ட டைனமோ, புது சீட்டு, வெண் தக்கைகள் பொருத்தப்பட்ட இரு சக்கரங்கள் என அந்த பழைய சைக்கிளைப் பார்ப்பதற்கு மணப்பெண் கோலத்தில்தான் இருந்தது. மனிதனின் முதல் சிறந்த கண்டுபிடிப்பென்று நினைத்தால் அது சக்கரமாகத்தான் இருக்கும், ஆனால் அதற்கடுத்த சிறந்த கண்டுபிடிப்பு இன்னொன்று வரும் வரையில் யாரும் அந்த முதல் கண்டுபிடிப்பான சக்கரத்தை பயன்படுத்தியிருக்க முடியாது. அந்த இராண்டாம் கண்டுபிடிப்பு வேறு ஒன்றுமில்லை, சக்கரத்தை நிறுத்த உதவும் பிரே

விளையாட்டாக சொல்கிறேன் #7

எழுபது, எண்பதுகளுக்கு பின் பிறந்தவர்களெல்லாம் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள்தான். தகட்டூர் பெரியப்பா அவர்கள் பல முறை சொல்லிக் கேட்டிருக்கிறேன், பியூசி படிக்க அவர்கள் இருபது கிலோமீட்டர் நடந்தே சென்றார்களென்று. ஆனால் எழுபதுகளுக்கு பின் கல்விமுறையில் ஏற்பட்ட மாற்றமும், ஊருக்கு ஒரு பள்ளி தொடங்கிய காரணத்தாலும், கல்வியென்ற, மனிதனின் நாகரீகம் காக்கும் குறைந்தபட்ச ஆடை அனைவருக்கும் கிடைக்கப்பெற்றது. ஆடையற்ற மனிதன் அரைமனிதனாயிற்றே! அப்படியாய், பஞ்சநதிக்குளம் சின்னாங்காட்டில் அமைந்திருந்த நக்கீரனார் பொருளுதவி நடுநிலைப்பள்ளிதான் எங்கள் ஊரார்கள் அனைவருக்குமான முதல் ஆடையை தைத்துக்கொடுக்க தொடங்கியது. அ.வீராசாமி அண்ணா (அண்ணா, அக்கா என்றே ஆசிரியர்களை அழைப்பது அந்த பள்ளியின் நடைமுறை!) அவர்கள் போட்ட முதல் (பருத்தி)விதையது. பின்னர் பஞ்சுகளாக வெடித்து சிதறியபொழுது, அதிலிருந்து நூல் எடுத்து பின்னலாடைகளை செய்தவர்கள் பலர். பாட புத்தகத்தில் இருக்கும் எந்த பழமானாலும், அதனையே நேரடியாக எடுத்துவந்து சாப்பிடக் கொடுத்து, சொல்லிக்கொடுத்த கனகவள்ளி அக்காவில் தொடங்கி, கம்யூனிச சிந்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு இயங்கிய மு

விளையாட்டாக சொல்கிறேன் #6

சலவை செய்த வெண்ணிற ஜிப்பா, வேட்டியுடன் வயதான நாட்டு வைத்தியர் ஒருவர் வீட்டிற்கு மாதம் ஒருமுறை வருகை தருவது வழக்கம். அவர் வரும் நாட்களில், என்னை வீட்டுக்காவலில் வைத்துவிடுவார் என் அம்மா. உடலுக்கு பிரச்சனையோ இல்லையோ, அவரிடம் கையை கொடுத்து பத்து நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும். பொறுமையாக இருகைகளையும் பிடித்து நாடி பார்த்து, பித்த நாடி, மூல நாடி, கப நாடிகளின் ஏற்ற இறக்கம் பற்றி முப்பது நிமிடங்களானாலும் விளக்கமளிப்பார். அவரின் சொற்கள் அனைத்தும் நடுக்கத்துடன் அகடுமுகடுகள் நிறைந்த 20 டெசிபெலுக்கும் குறைவான ஒலி அலைகளாக இருந்தாலும், அதனை செறிவூட்டி புரிந்துகொள்ளும் பிரத்யேக உணரி (சென்சார்) அம்மாவின் காதுகளில்தான் இருக்கும். 'ஆஆடுஉதொடாஆஆ எலையஅ கொஅஞ்சமாஆஆ எடுத்துஉஉ, அதுலஅஅ கொஞ்சமாஆஆ வெஅல்லத்தஅஅ சேஅர்த்துஉ' என அவர் கூற அம்மாவிற்கு உடனடியாக இன்வைவோ (invivo) ஆய்வு நடத்த நான்தான் நினைவுக்கு வருவேன். அவர் மாதாமாதாம் கொடுக்கும் பேதிமாத்திரைகளுக்கு ஆற்றங்கரையே அஞ்சிதான் நிற்கும். அப்பொழுதைய அனைத்து சனிக்கிழமை நாட்களையும் இரவுகளாக மாற்றிய பெருமை அவரையே சேரும். காரணம் அவரின் மூலிகை எண்ணெய். இர