இடுகைகள்

கனவு...

இது உண்மையாக விந்தையான உலகம்தான்.. பல ஆண்டுகளாக கனவு கண்டு, என்றாவது ஒரு நாள் நமக்கான கனவு இல்லத்தை அமைக்கவேண்டும் என்று நினைத்து மனதிற்குள் வரைந்துவைத்திருக்கும் வீட்டில் பால்கனி ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கும்.. தினமும் வேலை கொடுத்த கலைப்பையோ, பயண அசதியையோ, நண்பர்களுடனான அரட்டையையோ, மனைவி குழந்தைகளுடனான உரையாடலையோ, ஆகச்சிறந்த வாசிப்பு ஒன்றையோ அந்த பால்கனியில் வைத்து செய்துதீர்த்துவிடுவதென, அந்த கனவு பல கிளைகளை பரப்பியிருக்கும்... என்றேனும் அப்படி ஒரு வீட்டை அமைத்துக்கொண்டபின் எவரும் அந்த பால்கனியில் அமர்ந்து நினைத்த எதையாவது ஒன்றை கூட அனுபவித்துவிடுவதில்லை.. இந்த வாழ்க்கைமுறையும் நம்மை அப்படிசெய்ய அவ்வளவு எளிதில் அனுமதித்துவிடுவதில்லை.. இதோ, இந்த சொற்களின் கட்டுமானம் கூட ஒரு பால்கனி பற்றி கனவுகண்டுகொண்டிருக்கும் ஒருவனிடமிருந்து, வாடகை வீட்டு பால்கனியிலிருந்துதான் பிறந்துவருகிறது..  இதேபோலொரு கனவுதான் அன்றும் கூட.. அதுவொரு இதமான தென்றல் வீசும் இரவு, வெயில் காலமென்பதால் திறந்தவெளியில் தூங்குவது சிறந்தது எனப்பட்டது.. என்னதான் கீற்று வேய்ந்த கூரையும், மாட்டுசாணம் மொழுகிய தரையானாலும்,

ஒரு ஆடு நரியான கதை..

ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம்... அப்பா, இந்த கதைய நீங்க முன்னாடியே சொல்லிட்டீங்களே.. இது வேற ஊரு, வேற நரி.. சரி சரி.. அந்த நரிக்கு தொப்பை பசி வந்துடுச்சி.. பசி எடுக்காத போதே ஹாபிக்காக வேட்டையாடும் மிருகம் நரி.. பசி எடுத்தா என்ன பண்ணும்... தூங்கிடுமா!? யாரா இருந்தாலும் பசி எடுத்தா சாப்பாட தேடி ஓடுவாங்க அதுதான் இயற்கை.. தூக்கமெல்லாம் வராது.. அதனால நரி என்ன பண்ணும்னா, கண்மூடித்தனமா வேட்டையாட கிளம்பிடும்.. அப்படி சிவந்த கண்களுடனும், வெற்று வயிற்றுடனும் வேட்டையாட கிளம்பிய நரி கொஞ்ச தூரத்தில் ரெண்டு ஆட்டு குட்டிகள பார்த்துவிட்டது.. அப்போ அந்த நரி பயந்து ஓடிடுமா.. ஏன்னா ஆட்டுகுட்டி ரெண்டு இருக்கு, நரி ஒன்னுதான.. அடேய், அப்ரசன்டி.. நீயே மீதி கதைய சொல்லுடா.. அப்பறம் என்ன நரி தல தெரிக்க ஓடிப்போயி அவங்க அப்பா அம்மா எல்லாரயும் கூப்டு வந்துருக்கும்.. அப்படிதான் இல்ல.. இதுதான் இயற்கையோட விளையாட்டே.. ஆட்டுகுட்டிக்கு நரிய விரட்டும் அளவுக்கு உடலில் வலிமை இருந்தாலும், மன வலிமை சுத்தமா கிடையாது.. அதனால ஆட்டுக்குட்டி நரிக்கு விருந்தாகிவிடும்.. அச்சோ.. ஆமா, அந்த நரி ரெண்டு ஆட்டுக்குட்டிகள்ல ஒன்ன புடிச்சிக

பூசணிக்காய் தலையன்

படம்
டாக்டர் அஞ்சா சிங்கம் ஹீலர்பாண்டி சொல்லியது போல என் மூச்சையே திரும்பத்திரும்ப உள்ளிழுத்துக்கொள்வதால், சோர்வாகவே உணர்ந்தேன்.. கையில் ஏதோ ஐநூறு வைரஸ்கள் தொங்குவது போல காட்சி தருவதாகத்தான் மூளை புரோகிராம் செய்து வைத்திருந்தது.. அடிக்கடி அந்த தொங்கிக்கொண்டிருக்கும் வைரஸ்களை குளிப்பாட்டி டெட்பாடியாக்கும் பொருட்டு உலகின் தலைச்சிறந்த மருந்தான மாட்டு கோமியத்தை பூசிக்கொண்டேன்.. யாரோ ஒருவர் என்னருகில் கண்ணை மூடிக்கொண்டு, வாயை அங்கும் இங்குமாக பிளந்துகொண்டு வருவது போலவே வந்தார்.. பின் இயல்பு நிலைக்கு திரும்பினார்.. ஒன்று, இரண்டு, மூன்று முறை இப்படியே நடந்தது.. நான்காம் முறை அவர் தோற்றுவிட்டார்... விட்டார் ஒரு தும்மலை... ஏவுகணை வெடித்தது போலொரு பீதி அனைவருக்கும்.. அப்பொழுதுவரை தாடைக்குதான் மாஸ்க் என்ற அரசாங்கத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கொடி உயர்த்தப்பட்டு, மூக்கு, துணியால் செய்யப்பட்ட பதுங்கு குழிக்குள் அடைக்கலம் புகுந்தது.. மறுபுறம் இருமிக்கொண்டிருந்த வயதானவரைப் பற்றி கேட்கவே வேண்டாம்.. இருமலுக்கு என்ன கொரானாதான் சோல் புரபரேட்டரா.. ஆனால் அப்பொழுது இருமிய அனைவரும் கொரானாவின் உறவினர்களாகவே எடுத்த

உப்புவேலியில் பிறந்த ஊழல்..

கடந்த பதினெட்டு நாட்களாக ஒரு போர் முனையில் நின்றது போன்றதொரு மாயை.. உடலை அதிகமாகவே வருத்திவிட்டான் இந்த பூசணிக்காய் தலையன்.. தினந்தினம் இறப்பு செய்திகளை கேட்கும் பொழுதெல்லாம் எனக்கும் நாள் குறிக்கப்பட்டுவிட்டதோ என்றொரு அய்யம்.. முகக்கவசம் இன்றி நான் எங்குமே பயணித்தது இல்லை.. எங்கே எப்படி என் அழகை பார்த்தானோ அந்த பூசணிக்காய் தலையன்.. அவன் பிடியிலிருந்து விலகுவதற்குள் ஒரு பெரும் பாடு பட்டுவிட்டேன்.. பல நூறு அழைப்புகள்.. அனைத்தும், என்னுடைய தோழி மற்றும் குழந்தைகளுடைய உடல்நிலையை பற்றிய கேள்விகளை சுமந்து வந்திருந்தன.. என் தோழியும், நண்பன் வினோவும் இல்லையென்றால், என் நிலை என்னவாகியிருக்கும் என்றே தெரியவில்லை... மிகப்பெரும் அன்பு செலுத்தும் கூட்டம் என்னருகில் இருப்பதை நினைத்து கட்டற்ற மகிழ்ச்சி.. பெற்ற அன்பினை திருப்பி செலுத்திக்கொண்டேதான் இருக்கிறேன், இருப்பேன்.. இந்த பூசணிக்காய் தலையனை தகர்க்க ஒரேவழி அன்பை பரப்புவதுதான்.. என்னதான் இந்த பூசணிக்காய் தலையன் என்மீது பாய்ந்திருந்தாலும், அவன் கொடுத்த ஒற்றை நண்மை, 'நேரம்'.. பல நேரங்களில் நினைத்ததுண்டு, ஒரு பத்துநாட்கள் தனியாக புத்தக அறைக்க

உப்புவேலி - மூன்னோட்டம்

காந்தியின் உப்பு நடைபயணத்தைப் (சத்தியாகிரகம்) பற்றி படித்தபொழுது எனக்கு அவ்வளவு வயதாகிவிடவில்லை.. அந்த போராட்டம் எதற்கு என்ற புரிதலற்ற வயது.. அதைப்பற்றி அண்ணாக்கள் பாடமெடுக்கையில் ஒருவித எள்ளலுடனேயே கடந்திருக்கிறேன்.. 'என்னது உப்புக்காக போராட்டமா!! நம்ம வீட்டு தெக்கால பத்து நிமிசம் நடந்தா போதுமே உப்பளத்துக்கு போயிடலாம்.. அங்க கண்டமேனிக்கு படந்து கெடக்குமே உப்பு.. உவரிச்செடிய ரெண்டு கால்ல கட்டிகிட்டு உள்ள எறங்குனா, ஒரு மூட்டய ஒரு மணிநேரத்துல அள்ளிட்டு வந்துடலாமே.. எதுக்கு அதுக்கெல்லாம் ஒரு போராட்டம்..' இப்படியாய் நினைத்ததுண்டு.. உங்க தாத்தாவ பத்தி தெரியுமாடா? என்ற கேள்விக்கெல்லாம் பதில் அறியாத சிறுவனாய் இருந்தபொழுது எனக்கு கிடைத்த பதில், 'அவரு ராசாசி உப்பெடுக்க வந்தப்ப, மரங்கள்ல சாப்பாட்ட கட்டிவச்சி உதவுனவரு..' என்று கேள்விப்படுகையில் அது வெறுமனே வெட்டி பந்தாவுக்குதான் பயன்பட்டுவந்தது.. ஆனால் அந்த உப்பிற்காக இந்த இந்திய நாடே இரண்டாக பிரிக்கப்பட்ட வரலாற்றை அறிந்தபொழுது, உப்புசத்யாகிரகத்தின் அப்பொழுதைய தேவையும், அன்றைக்கு வாழ்ந்த மக்களின் இன்னல்களையும் புரிந்துகொள்ளமுடிகிற

விளையாட்டாக சொல்கிறேன்#24

புதுப்புது வேடமிட்ட திகதிகளுடன் நேரம் யாருக்காகவும் காத்திருக்க விரும்பாமல் கடந்துகொண்டே போயின, கேள்விகள் மட்டும் எப்பொழுதும் போல, மேப் இல்லா புதையலைப் போல தோண்டும் வரை மனதைவிட்டு வரமாட்டேன் என அடம்பிடித்து அழுந்திப்போய்க் கிடந்தன.. ஒரு பொழுதும் அவனை கல்லூரி கேண்டினில் பார்த்ததில்லை, பதினோறு மணிக்கு அவசரமாய் கடிபடும் சூடான பப்சுடனும் கண்டதில்லை. வேறுபட்டவன்தான், அவன் தனிமை விரும்பி, ஒரு கவிஞனைப் போல, ஒரு புத்தனைப் போல, ஒரு சந்நியாசியைப் போல.. கவிஞன் தனிமையைப் பிழிந்து சொற்களை தேடுவான், நண்பன் வாழ்க்கையைத் தேடினான். புன்னகை பழகாத முகம், மாற்றம்பெறாதா அவனது ஆடைகள், பெயருக்கென ஒரு செருப்பு, தன்னை உடைக்கப்போகிறானோ என அஞ்சி நடுங்கி எழுத்துகளை அவன் எழுதும்பொழுதெல்லாம் பாழாக்கும் அவனது எழுதுகோல், காது அழுக்கை எப்பொழுதுமே சிறிது தாங்கி நிற்கும் அவனது சைக்கிள் சாவி கொத்து, என அவனது அடையாளங்கள் அனைத்துமே ஒரு கவிஞனின் கற்பனைக்கு தீனிபோடவல்ல இயற்கையின் அழகை ஒத்த கருப்பொருட்கள்.  இரண்டாம் ஆண்டு பாதி கடந்திருக்கும், எனக்கேதோ ஒரு திடீர் புத்தி ஒன்று உதித்திருந்தது.. அறிவென்றால் ஆங்கிலம்தானென்ற நம்பிக

விளையாட்டாக சொல்கிறேன்#23

வேளாவேளைக்கு இல்லையென்றாலும், இருவேளை உணவுக்காகவேணும், வேலை கிடைத்ததில் அவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அதிலும் சிலநாட்களுக்கு ஒரு வேளை உணவை இழக்க நேரிடலாம், அப்பாவின் மருந்து செலவிற்காக! இருந்தென்ன, ஊதியத்தை தாண்டி ஏதேனும் முதலாளி கொடுத்துவிடமாட்டாரா என்ன? அபரிவிதமான நம்பிக்கை அவனுக்கு, முதலாளியின் மீதல்ல, அவனின் உழைப்பின் மீது. 'என்னடா, விடியிறத்துக்கு முன்னயே எந்திரிஞ்சி போயிடுற, அப்படி என்ன வேலன்னு சொல்லிட்டுதான் போயேன்', அம்மா பலமுறை கேட்டும், அவனிடம் சரியான பதிலில்லை.. அதெல்லாம் நல்லவேலதான், வரேன், என்றவன் பேச்சற்று சாய்வு நாற்காலியில் கிடந்த தன் அப்பாவின் காலின் விழுந்து வணங்கி, புறப்படலானான். என்னதான் உதவாக்கரை, பெற்ற பிள்ளையை வளர்க்க தெரியாதவரென ஊர் சொன்னாலும், அப்பாவாயிற்றே! தான் பெற்ற மகனுக்கு தன்னை பிடிப்பதற்கு, தமக்கு சிறப்பு பண்புகள் எதுவும் வேண்டுமா என்ன!  அப்பாவையும், அம்மாவையும் தவிர, வேறு யார் காலிலும், ஏன் கடவுளின் காலிலும் விழுந்தவனில்லை அந்த சிறுவன். யார் சொன்னது சிறுவனென்று, அந்த பெரிய மனிதன்! சரியாக மூன்றரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்ட அவன், திரும