கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்
நாட்குறிப்பை பதிவு செய்கிறேனோ இல்லையோ , நாட்குறிப்பேட்டை மட்டும் அழகானதாக வாங்கிவைத்துக்கொள்வது என்னுடைய வழக்கம்.. இந்தப் பழக்கம் , என்னுடைய நண்பன் வினோவிடமிருந்து வந்தது.. டிசம்பர் வந்துவிட்டால் போதும் , மொத்த தஞ்சாவூரையும் அலசி ஆராய்ந்து , குறைந்தது இரண்டு மூன்று நாட்குறிப்பேட்டையாவது வாங்கிவிடுவான்.. தாத்தாவிற்கு ஒன்று , எனக்கொன்று , என.. அவனுடைய கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும்.. எத்தனை பாடுபட்டும் , அந்த கையெழுத்து எனக்கு வாய்க்கவில்லை.. கையெழுத்தில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.. அந்த நாட்குறிப்பை எழுதிவிட்டு , என்னுடைய கையெழுத்தை இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னாலேயே வாசிக்கமுடியாது என்பதை நினைக்கையில் , அந்த நாட்குறிப்பேடு இரண்டு நாட்களுடன் தன் வாழ்வின் பலனை முழுவதும் பெற்றுவிட்டதைப்போல , வெற்று காகிதமாகவே எஞ்சி நின்றுவிடும்.. பின்னர், ஆண்டு பொறிக்கப்பட்ட அந்த குறிப்பேட்டின் பக்கங்கள், தனக்கு தொடர்பே இல்லாத ஒரு அண்டின் நாட்களில் நடக்கும் செல்வுகளையும் அதன் கூட்டுத்தொகையையும் தாங்கி நிற்கும்.. பிற்பாடு , கையெழுத்து சரியில்லை என்றாலும் எழுதலாமே என்று தவறா...