மிஷ்கின் என்னும் நான்..
மிஷ்கின் என்னும் நான்.. மிஷ்கினின், கோபியுடனான நேர்காணலை முழுவதுமாகப் பார்த்தேன். பார்த்தேன் என்று சொல்வதைவிட, வாசித்தேன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஒரு முழு நாவலை வாசித்து முடித்த உணர்வு. எத்தனை மனிதர்கள்.. எத்தனை புத்தகங்கள்.. எத்தனை திரைப்படங்கள்.. எத்தனை நினைவுகள்.. என்னவொரு வாழ்க்கை.. ஒரு மனிதனுக்குள் இவ்வளவு உலகங்கள் இருக்க முடியுமா என்று வியக்க வைக்கிறது. மிஷ்கின் பொதுவாக மேடைகளில் பேசுவது அவ்வளவாக எனக்கு பிடிப்பதில்லை.. ஆனால், இந்த நேர்காணலில் அவரின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. தான் வாசித்த புத்தகத்தையும், பார்த்த திரைப்படத்தையும், சந்தித்த மனிதனையும் முதலில் தனக்குள் அனுமதிக்கிறார். அது அவருக்குள் ஏதோ ஒன்றைச் செய்த பிறகு, அந்த அனுபவத்தையே நம்மிடம் பரிமாறுகிறார்.. ஒரு படைப்பாளிக்குத் தேவையான முக்கியமான பண்பு இதுதான் என்று நினைக்கிறேன். வெறும் பார்வையை மீறிய கவனிப்பு.. அனைவருமே வாசிப்பது உண்டு.. நானும் தொடர்ந்து வாசிக்கிறேன்.. ஆனால், அனைத்தையும் உள்வாங்குகிறோமா என்றால், இல்லை.. அந்த ஒரு வேறுபாடுதான் ஒரு படைப்பாளிக்கும், சாமானியனுக்கும் இருக்கிறது என்று...