இடுகைகள்

மAIத்துனன் அலப்பறைகள்

  நண்பர் ஒருவர் தனி செய்தியில் வந்தார்.. அவரை நான் இதற்கு முன்பு சந்தித்த ஞாபகம் இல்லை.. அதனால், Have we met anytime? என்று கேட்டு தட்டச்சினேன்... ஆனால், அருகில் இதை கவனித்துக்கொண்டிருந்த என்னுடைய மைத்துனன், இதை இப்படி கேட்கக்கூடாது மச்சி என்றான்... சரி எப்படி கேட்கவேண்டும் என அவனிடம் வினவியபோது, Do you know if we've met anytime? என்று கேள், என்றான்.. நானும் அப்படியேதான் செய்தேன்.. அவனுக்கு என்னைவிட ஆங்கிலம் அத்துப்படி.. ஆங்கிலம் மட்டுமல்ல, அனைத்துமே.. சிறிது நேரம் அவனை, இவ்ளோ நாளு எங்க இருந்த நீ.. என்றவாறு மெய்சிலிர்த்து பார்த்துவிட்டு, அந்த செய்தியை, அந்த நண்பருக்கு அனுப்ப முற்பட்டேன்.. இரு இரு.. இத இன்னும் சரிப்படுத்தலாம்.. என்றான் மைத்துனன்.. எப்படி? என்றேன்.. இதை, Do we have met anytime? என்று மாற்றிவிடு என்றான்.. நானும் அப்படியே செய்தேன்... இப்பொழுதும் அதே மெய்சிலிர்ப்புடன் கூடிய ஒரு பார்வையை வீசினேன்.. இன்னும் உற்சாகமான அவன், இதுவும் வேண்டாம் என, Would you happen to know if we have met anytime? என்று மாற்றிவிடு என்றான்.. அதே சிலிர்ப்பு.. ஆனால் இப்பொழுது கொஞ்சம் வெறுப்பும் ஒட...

கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்

படம்
  நாட்குறிப்பை பதிவு செய்கிறேனோ இல்லையோ , நாட்குறிப்பேட்டை மட்டும் அழகானதாக வாங்கிவைத்துக்கொள்வது என்னுடைய வழக்கம்.. இந்தப் பழக்கம் , என்னுடைய நண்பன் வினோவிடமிருந்து வந்தது.. டிசம்பர் வந்துவிட்டால் போதும் , மொத்த தஞ்சாவூரையும் அலசி ஆராய்ந்து , குறைந்தது இரண்டு மூன்று நாட்குறிப்பேட்டையாவது வாங்கிவிடுவான்.. தாத்தாவிற்கு ஒன்று , எனக்கொன்று , என.. அவனுடைய கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும்.. எத்தனை பாடுபட்டும் , அந்த கையெழுத்து எனக்கு வாய்க்கவில்லை.. கையெழுத்தில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.. அந்த நாட்குறிப்பை எழுதிவிட்டு , என்னுடைய கையெழுத்தை இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னாலேயே வாசிக்கமுடியாது என்பதை நினைக்கையில் , அந்த நாட்குறிப்பேடு இரண்டு நாட்களுடன் தன் வாழ்வின் பலனை முழுவதும் பெற்றுவிட்டதைப்போல , வெற்று காகிதமாகவே எஞ்சி நின்றுவிடும்.. பின்னர், ஆண்டு பொறிக்கப்பட்ட அந்த குறிப்பேட்டின் பக்கங்கள், தனக்கு தொடர்பே இல்லாத ஒரு அண்டின் நாட்களில் நடக்கும் செல்வுகளையும் அதன் கூட்டுத்தொகையையும் தாங்கி நிற்கும்.. பிற்பாடு , கையெழுத்து சரியில்லை என்றாலும் எழுதலாமே என்று தவறா...

சாங்வான் குறிப்புகள் #05

 குவான் என்றொரு நண்பர் கொரியாவில் எனக்கு உற்ற தோழராக இருந்திருந்தார். இதேபோலொரு ஆண்டு தொடக்கத்தின்பொழுதுதான், சரியாக சொல்லவேண்டுமானால், 2012ஆம் ஆண்டு, ஜனவரி மாதம்தான் அங்கு என் கால் தடத்தை, இல்லை இல்லை.. வுட்லேண்ட் ஷூவின் தடத்தை பதியவைத்திருந்தேன். அப்படி ஒரு ஷூவை எனக்கு அறிமுகப்படுத்தியது அந்த கொரிய பயணம்தான்.. என்னை வரவேற்க வந்த ஹன் ஜூ வூ என்ற பெண்ணும், அவரின் தோழியும், என்னிடம் கந்தி என்ற சொல்லைத்தவிர வேறு ஏதும் சொல்லவில்லை.. பின்புதான் அவர்களுக்கு ஆங்கில சொற்கள் வாயில் நுழையாது, நுழைந்தாலும் வெளியில் வராது எனத்தெரிந்துகொண்டேன்.. அன்றிலிருந்தே நான் ஒரு ஆங்கிலேயனாய் என்னை உணர்ந்துகொள்ள தொடங்கிவிட்டேன், அது வேறு கதை... பின்னொரு நாளில்தான், அன்றுவரை கந்தி என்பது கொரிய சொல் போல என நினைத்துக்கொண்ட எனக்கு பேரிடி விழுந்தது.. என்னுடைய பெயரின் பின்னொட்டாக இருக்கும் எனது அப்பாவின் பெயரான காந்தி என்பதைத்தான் அப்படி சொல்லியிருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட பொழுது எனக்கு கொரியாவில் வயது மூன்று மாதங்கள் ஆகிவிட்டன... தவழமுடியா வயதானாலும், அந்த கொரிய தோழனின் உதவியால் தவழ அல்ல, எழுந்து ஓடகூட செய்...

சாங்வான் குறிப்புகள் #04

When Life Gives You Tangerines, என்ற கொரிய இணைய தொடருக்கு மனதை பறிகொடுத்தோர் பட்டியலில் என் பெயரும் உண்டு..  கதை ஜேஜு என்ற கொரிய தீவு ஒன்றில்தான் தொடங்கும்.. கடலில் மூழ்கி மூச்சுபிடித்து சிப்பிகளை எடுத்துவரும் அம்மா, தன் மகள் எப்படி வளரவேண்டும் என நினைக்கிறாள், மகள் அம்மா நினைத்தபடி எப்படி வளர்கிறாள் என்பதே மொத்த கதையும்.. அம்மா இறந்து, மகள் அம்மாவாகி, பாட்டியாகி, கடைசி காலம் அவளின் கவிதை தொகுப்பு வெளிவரும் வரை நீளும்.. ஜேஜுவில் தொடங்கும் கதை, சியோல்வரை நடந்தே பயணிக்கும் என்றாலும் பயணம் முழுவதும் அவ்வளவு இனிமையானதாக இருக்கும்..  கொரிய தஞ்சை சாங்வானில் இருந்து நாற்பது கிலோமீட்டர் சாலை வழி பயணித்து, ஒரு மணிநேரம் விமானத்தில் பயணித்தால், அந்த ஜேஜு தீவை அடைந்துவிடலாம்.. பல தீவுகள் கொரியாவை சுற்றி இருந்தாலும், ஜேஜுதான் இருப்பதிலேயே பெரிய தீவு.. அதுமட்டுமே சிறப்பென்றில்லை.. அந்த தீவே எரிமலை படிமங்களால் ஆனது என்பது அதன் மிகமுக்கிய சிறப்பு.. குறுக்கும் நெடுக்குமாக சாலை வழியில் ஒரு மணிநேரத்திற்கு மேல் பயணிக்க மேலும் சாலையில்லை என்றாலும் ஐந்தாறு நாட்கள், தூக்கமின்றி அலைந்தாலும், அனைத்து ...

சாங்வான் குறிப்புகள் #03

படம்
  பியான்சன் நோக்கிய பேருந்து பயணம்.. வழியெங்கும் ஆர்ப்பரிப்புடன் கடந்துவந்து இதோ இந்த கழிமுகத்தில் கடலுடன் ஒன்றிப்போய், காணாமல் போகிறது.. இல்லை இல்லை, கடலாக விரிகிறது.. தன் மூதாதைய ஹைட்ரஜனுடனும், ஆக்சிசன்களுடனும் பின்னிப்பிணைந்து நலம் விசாரித்துக்கொள்கின்றன.. கொரியாவின் தஞ்சையான சாங்வானில் இருந்து ஏறத்தாழ முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் , மேற்கு ஓரத்தில் , மஞ்சள் கடற்கரையில்  அமைந்திருக்கிறது இந்த பியான்சன்.. யாலு , ஹான் போன்ற வற்றா நதிகள் கொரிய தீபகற்பத்திலிருந்தும், மஞ்சள் நதி சீன தேசத்திலிருந்தும் இந்த மஞ்சள் கடலில்தான் நட்புகொண்டு நல்லவர்களைப்பற்றிய உரையாடலை நிகழ்த்துகின்றன.. பேருந்து ஆற்றங்கரைகளையும் , பெரும் மலைக்குன்றுகளையும் கடந்து சென்றுகொண்டிருக்க , அசோகமித்திரன் என்னை ஹைதராபாத்திற்கு அழைத்துச்சென்று கிரிக்கெட் விளையாடவும் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார்.. அந்த 18வது அட்சக்கோட்டில் பயணித்துக்கொண்டே , பேருந்தினுள் அடைபட மறுத்து எதிர் திசையில் பயணப்பட்டவற்றை கண்டு ரசித்துக்கொண்டிருந்தேன்... ஓடிக்கொண்டிருத்த நீர் சத்தமிட்டு, உறக்கத்தில் ஆழ்ந்திருந்த உரைந்த ந...

சாங்வான் குறிப்புகள்#02

படம்
  வரலாறு காணத அளவிற்கு மழையை கொடுத்துவிட்டாயே மாரியம்மா , என்கிறார்கள்.. அதே வேளை , ‘ அந்த காலத்துலயெல்லாம் எவ்வளவு அடைமழை பெய்யும் தெரியுமா , பக்கத்துல இருக்க ஆளே தெரியாதுன்னா பாத்துக்கயேன்’ , என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்..   அப்படியேதான் கொரிய மாரியம்மனும்.. ஆனால் கொரிய மாரியம்மன் , மழைக்காக தனிக்காலத்தை ஒதுக்கி வைக்கவில்லை.. எல்லா காலங்களிலும் மாதம் மும்மாரி பொழிய வைத்துவிடுவாள்.. அதனால்தான் என்னவோ , இங்கு மாரியம்மனைத் தூக்கி சுமப்பதே இல்லை..   வழக்கத்திற்கு மாறாக , இங்கு குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னரே , குளிர் தொடங்குகிறதே , என்று பலரும் கூறுவது வழக்கம்..   கொரியாவில் , குளிர்காலம் , கோடைகாலம் , வசந்த காலம் , இலையுதிர்காலம் என நான்கு காலங்களும் ஒவ்வொரு ஆண்டும் சரியாக வந்துபோகும்..   நவம்பரில் தொடங்கும் குளிர் , டிசம்பர் , ஜனவரி என உச்சம் தொட்டு , பிப்ரவரியில் முடிய வேண்டுமா , மார்ச்சில் முடியவேண்டுமா என்று வட்டமேசை மாநாடு நடத்தி , ஒரு முடிவுக்கு வரும்.. குளிர் முடிந்தால் வசந்தம்தானே... வசந்த காலம் மார்ச் , ஏப்ரல் , மே என சென்று.. ஒருவழியா...

சாங்வான் குறிப்புகள்#01

படம்
சாங்வான் பல்கலைக்கழகம்.. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு பின்பு இந்த அழகிய இடத்தின் மேற்கு ஓரத்தில் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கும் ஒரு பதினைந்துமாடி கட்டிடத்தின் எட்டாவது மாடியில் நிற்கிறேன்... இது வளாகத்தின் உள்ளேயே அமைந்திருக்கும் தங்குமிடம்.. இங்கிருந்து மேற்கு சன்னல்கள் வழி பார்க்கையில் மொத்த சாங்வான் நகரமும் கண்ணுக்குப் புலப்படும்.. அதே வேளை நீங்கள் காணும் இந்த படம், கிழக்கு திசையில் இருக்கும் சன்னல் வழி எடுக்கப்பட்டது.. மொத்த பல்கலைக்கழகமும் இதில் தெரியும், மரங்களால் மறைக்கப்பட்ட ஒன்றிரண்டு கட்டிடங்களை தவிர்த்து.. இங்கிருந்து எனது ஆய்வகத்திற்கு செல்ல மகிழுந்தில் ஐந்து நிமிடமும், நடந்தால் இருபது நிமிடமும் ஆகும்.. மின்கலன் உதவியுடன் இடம்பெயரும் பல உருளிகளும் உண்டு.. அதற்கு ஆண்டு சந்தா, மாத சந்தா என செலுத்த வேண்டும்.. பெரும்பாலான மாணவர்கள் இந்த உருளிகளையே பயன்படுத்துகின்றனர். நடந்துசெல்வதை அவர்கள் விரும்பாததற்கு காரணம், இந்த தங்கும் விடுதிகள் குன்றின் மேல் அமைத்திருப்பதுதான்.. அதுவன்றி, இந்த உருளிகளை எங்கு வேண்டுமானாலும் நிறுத்திவிட்டு போகலாம்.. மீண்டும் அதை பயன்படுத்த வேண்டுமானால், அ...