இடுகைகள்

ஐமேக்சில், சன் டிவி பார்த்த கொழுக்கட்டை!

படம்
  அரிசி மாவு இல்லை.. ஊரிலிருந்து எடுத்து வந்த இடியாப்ப மாவு தீர்ந்து மாதங்கள் கடந்துவிட்டன. ஒருநாள், கொரியாவில் கிடைக்கும் அரிசி மாவில் ஆசையாக இடியாப்பம் செய்து பார்த்தோம். அதற்குப் பிறகு, இடியாப்பம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையையே பயன்படாத ஓர் ஆழ்துளைக் கிணற்றில் தூக்கிப் போட்டுவிட்டு, மீதமிருந்த மாவை வைத்து நிரப்பி, செய்த இடியாப்பத்தை மூடியாக்கி அடைத்துவிட்டோம். பிள்ளையார் நினைத்தாலும் அந்த மூடியை அசைக்கமுடியாது.. ஊரில், அதுவும் எங்கள் வீட்டில் கொழுக்கட்டையை ஒரு வேளை உணவாக எடுத்துக்கொள்வது வழக்கம். அதனால், அம்மா இனிப்புக் கொழுக்கட்டையுடன் சேர்த்து, உருளைக்கிழங்கு வறுவலை உள்ளே வைத்து காரக் கொழுக்கட்டையும் செய்வார். அந்த வர்ஷன் கொழுக்கட்டை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இங்கு மாவு கிடைக்கவில்லை. என்ன செய்வது.. அதற்காகக் கொழுக்கட்டைச் சாப்பிடும் ஆசையை விட்டுவிட முடியுமா.. எப்படியாவது கொழுக்கட்டை சாப்பிட்டுவிட வேண்டும் என்ற உறுதியுடன் வீட்டிற்கு வந்தேன். மனைவியிடம் முன்கூட்டியே உருளைக்கிழங்கு வறுவலைச் செய்து வைத்துவிடச் சொல்லியிருந்ததால், அவரும் தயாராக இருந்தார். கொரியாவில் கிடைக்கு...

எலிபெண்ட் மேனும் இரண்டு கொழுக்கட்டைகளும்!

படம்
  எலிபெண்ட் மேனும், இரண்டு கொழுக்கட்டைகளும்! காலை ஒன்பது மணியிருக்கும். சென்ற வாரத்தில் ஒருநாள் அலுவலகத்தைத் திறந்த எனக்குத் தாங்க முடியாத வியப்பு! என்னுடைய மேசையின் மீது ஒரு வெள்ளைப் பிள்ளையார் வீற்றிருந்தார். என்னால் நம்பவே முடியவில்லை. இன்னும் இரண்டு கொரிய நண்பர்களுடன் சேர்த்து, எங்கள் மூவருக்கும் இருக்கைகள் உள்ள அலுவலகம் அது. இந்தப் பிள்ளையாரை நான் கொண்டுவந்து வைத்திருந்தால் ஒழிய, அவர் அங்கு வந்து அமர்ந்திருக்க வேறு சாத்தியமே இல்லை. எப்படி வந்தார்.. என்று மண்டையை உடைத்துக்கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு அடுத்த அறையே ஆய்வுக்கூடம் என்பதால், அந்த இரண்டு கொரிய நண்பர்களும் பல நாட்கள் அலுவலகத்திலேயே தங்கிவிடுவார்கள். இரவு முழுவதும் வேலை செய்வார்கள்.. பகல் முழுவதும் தூங்குவார்கள்... அந்தக் கேடுகெட்ட பழக்கத்தையெல்லாம் நான் விட்டொழித்து ஆண்டுகள் பல கடந்துவிட்டன. நண்பர்கள் இன்னும் தங்கள் உடலை முழுமையாகக் கெடுத்துக்கொள்ளவில்லை என்பதால், தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். நான் அலுவலகத்திற்குள் வந்தபோது நண்பர்களின் குறட்டைச் சத்தம் மட்டும்தான் கேட்டுக்கொண்டிருந்தது. மேசையிலிருந்த பிள்ளையார...

அழகாக காண்பித்துக்கொள்ள எதற்கு சாதனை!?

படம்
கடந்த இரண்டு வாரங்களாக சமூக வலைதளங்களைத் திறந்தாலே 80களின் புகைப்படங்கள்தான்.. ஆண்கள், பெண்கள் என்று எல்லோரும் எண்பதுகளுக்குள் சென்று வந்துகொண்டிருக்கிறார்கள். அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது எனக்கு வேறொன்று தோன்றியது. நம்மவர்கள் தங்களை அழகாகப் பார்த்துக்கொள்ள மிகவும் விரும்புகிறார்கள். அதில் என்ன தவறு இருக்கமுடியும்.. ஆனால், அதைச் செய்வதற்குக்கூட நமக்கு AI (செநு) தேவைப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. செநு மூலம் நம்மை அழகுபடுத்திக்கொள்வதில் இரண்டு வசதிகள் இருக்கின்றன. ஒன்று, நாம் எப்படி இருக்க ஆசைப்படுகிறோமோ அப்படி நம்மையே ஒருமுறை பார்த்துக்கொள்ள முடிகிறது. இரண்டாவது, யாராவது, என்னப்பா... இவ்வளவு பில்டப்பா.. என்று கேட்டால், அட, செநு பண்ணினதுப்பா... என்று சிரித்துக்கொண்டே கடந்துவிடலாம். அதாவது, அழகாகத் தோன்ற வேண்டும் என்ற ஆசை நம்முடையது. ஆனால் அந்த ஆசைக்கான பொறுப்பை மட்டும் செநுவிடம் கொடுத்துவிடுகிறோம். இதில்தான் கொஞ்சம் உளவியல் இருக்கிறது. நம்மில் பலருக்கு நம்மை முதன்மைப்படுத்திக்கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது.. நன்றாக உடை அணிவது, முடியை கொஞ்சம் அலங்கரித்துக்கொள்வ...

சாங்வான் குறிப்புகள் #08

படம்
சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும்போது, பந்து கருவக்காட்டிற்குள் புகுந்து தொலைந்துபோவது வழக்கம். அதைக் கண்டுபிடிப்பதற்கு எங்களிடம் ஒரு அறிவியல்பூர்வமான கோட்பாடு ஒன்று இருந்தது.. பந்து எந்தத் திசையில் சென்றது என்பது ஓரளவிற்கு நினைவில் இருக்கும், ஆனால் எங்கே விழுந்தது என்பதுதான் தெரியாது.. அதனால் உடனே இன்னொரு பந்தை எடுப்போம், தொலைந்த பந்து எந்த திசையில், எந்த வேகத்தில் சென்றதாக நினைக்கிறோமோ, கிட்டத்தட்ட அதேபோல இன்னொரு பந்தை எறிவோம். இந்த முறை எல்லோரும் கண்சிமிட்டாமல் அதையே பார்த்துக்கொண்டிருப்போம். இரண்டாவது பந்து எங்கே விழுகிறதோ, அந்த இடத்தைச் சுற்றி ஒரு பத்து மீட்டர் வட்டமடித்துத் தேடினால், முதல் பந்து கிடைத்துவிடும் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.. சில நேரங்களில் கிடைத்திருக்கிறது. பல நேரங்களில் கிடைக்காமல் போயிருக்கிறது. ஆனால்... பந்து கிடைக்காததால் எங்கள் கோட்பாடு ஒருபோதும் பொய்யாகிவிடுவதில்லை.. செய்முறைப் பிழை - experimental error என்று எடுத்துக்கொண்டு இன்னொரு பந்தை வைத்து, அடுத்த ஆட்டத்திற்கு போய்விடுவோம்.. சில வேளைகளில் அந்த கோட்பாட்டை செயல்படுத்துவதற்காக பயன்படுத்திய பந்...

மிஷ்கின் என்னும் நான்..

படம்
  மிஷ்கின் என்னும் நான்.. மிஷ்கினின், கோபியுடனான நேர்காணலை முழுவதுமாகப் பார்த்தேன். பார்த்தேன் என்று சொல்வதைவிட, வாசித்தேன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஒரு முழு நாவலை வாசித்து முடித்த உணர்வு. எத்தனை மனிதர்கள்.. எத்தனை புத்தகங்கள்.. எத்தனை திரைப்படங்கள்.. எத்தனை நினைவுகள்.. என்னவொரு வாழ்க்கை.. ஒரு மனிதனுக்குள் இவ்வளவு உலகங்கள் இருக்க முடியுமா என்று வியக்க வைக்கிறது. மிஷ்கின் பொதுவாக மேடைகளில் பேசுவது அவ்வளவாக எனக்கு பிடிப்பதில்லை.. ஆனால், இந்த நேர்காணலில் அவரின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. தான் வாசித்த புத்தகத்தையும், பார்த்த திரைப்படத்தையும், சந்தித்த மனிதனையும் முதலில் தனக்குள் அனுமதிக்கிறார். அது அவருக்குள் ஏதோ ஒன்றைச் செய்த பிறகு, அந்த அனுபவத்தையே நம்மிடம் பரிமாறுகிறார்.. ஒரு படைப்பாளிக்குத் தேவையான முக்கியமான பண்பு இதுதான் என்று நினைக்கிறேன். வெறும் பார்வையை மீறிய கவனிப்பு.. அனைவருமே வாசிப்பது உண்டு.. நானும் தொடர்ந்து வாசிக்கிறேன்.. ஆனால், அனைத்தையும் உள்வாங்குகிறோமா என்றால், இல்லை.. அந்த ஒரு வேறுபாடுதான் ஒரு படைப்பாளிக்கும், சாமானியனுக்கும் இருக்கிறது என்று...

சாங்வான் குறிப்புகள் #07

படம்
பியோதர் தஸ்தோவஸ்கியின் வெண்ணிற இரவுகளில் வரும் கனவுக்காரனைப் போல, இந்த வெக்கை இரவுகளில் நானும் நடக்கிறேன். அவன் நாஸ்தென்காவைத் தேடினான். நான் காற்றைத் தேடுகிறேன்.. கொரியாவில் கோடை காலம் வந்துவிட்டது.. வெப்பநிலை முப்பதிலிருந்து முப்பதைந்து வரைதான் என்றாலும், காற்றில் இருக்கும் அதீத ஈரப்பதத்தால் வியர்வை சுரப்பிகள் அழுது தீர்க்க தொடங்கிவிட்டன.. வெளியில் இப்படி என்றால், வீட்டினுள் கேட்கவே வேண்டாம்.. எட்டாவது மாடியில் கிழக்கு, மேற்கு என இரண்டு பக்கங்களிலும், மொத்தமாக நான்கு சன்னல்களுக்கு நடுவே நான் அடைந்திருப்பதால், காற்று முதலில் என் உரோமங்களுடன் கைகுளுக்கிய பின்தான் கீழிறங்கும்.. ஆனால் இன்று அந்த உரோமத்திற்கு கூட.. சாரி.. சூடான காற்றுக்கு கூட வழியில்லை.. இறுக்கமாக இருக்கிறது..  என்னதான் கேட்ஜட்களிடம் என் மனதை, முன்பணம் இல்லாமலேயே வாடகைக்கு கொடுத்திருந்தாலும், இந்த குளிரூட்டிகளை மட்டும் ஏற்கமுடியவில்லை.. காரணம், இரவில் அதன்துணையுடன் தூங்கிவிட்டு காலையில் வெளியில் வரும்பொழுது, இந்த உலகமே என்னை வெறுத்து வெப்பதை என் மேல் உமிழ்ந்து உடல்முழுவதும் நீர் கடுப்பு ஏற்படுவதுபோல் இருக்கும்.. ...

சாங்வான் குறிப்புகள் #06 (மால(ர)தாங்..)

படம்
பர்சனலைசுடு மெடிசன்- தனிப்பயனாக்கப்பட்ட மருந்து என்றொரு புது வகையொன்று வளர்ந்துவருகிறது.. இதைப்பற்றி முன்பே ஒரு முறை எழுதியிருந்தேன்.. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், அலோபதி மருந்துகள் பொதுவாக மேற்கத்தியர்களுக்கான மரபணுக்கு ஏற்றவாறே வடிவமைக்கப்பட்டிருப்பதால், அவற்றில் பெரும்பாலான மருந்துகள் நம்மவர்களுக்கு அதே மாதிரியான பயனை கொடுப்பதில்லை.. சில வேளைகளில் மோசமான பக்கவிளைவுகளையும் கொடுக்கவல்லது. கவனாக வாசியுங்கள்.. எங்கே கவனமாக வாசிக்கிறீர்கள்..! கவனமாக என்பதற்கு கவனாக என்று எழுதியிருந்தேன்.. சரி, இனி கவனமாக வாசியுங்கள்.. பக்கவிளைவுகள் என்று நான் குறிப்பிடுவது, பொதுவான பக்கவிளைவுகள் அல்ல, குறிப்பிட்ட மரபணு தொடரை கொண்டவர்களுக்கு ஒவ்வாமல் போவதால் வரும் பிரச்சனை. இதனை கருத்தில் கொண்டு, ஆய்வாளர்கள், மருத்துவர்கள் என பலர் தனிப்பயனாக்கப்பட்ட மருந்துகளை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறார்கள்.. கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் மருந்தகத்திற்கு செல்கிறீர்கள், அங்கு உங்களுக்காகவே கொடுக்கப்பட்ட ஒரு மருத்துவ ஆதாரை காண்பிக்கிறீர்கள், அதற்கு ஏற்றவாறு ஒரு எந்திரம் உங்களுக்கான மருந்தை சுடச்சுட சம...