இடுகைகள்

சாங்வான் குறிப்புகள் #07

படம்
பியோதர் தஸ்தோவஸ்கியின் வெண்ணிற இரவுகளில் வரும் கனவுக்காரனைப் போல, இந்த வெக்கை இரவுகளில் நானும் நடக்கிறேன். அவன் நாஸ்தென்காவைத் தேடினான். நான் காற்றைத் தேடுகிறேன்.. கொரியாவில் கோடை காலம் வந்துவிட்டது.. வெப்பநிலை முப்பதிலிருந்து முப்பதைந்து வரைதான் என்றாலும், காற்றில் இருக்கும் அதீத ஈரப்பதத்தால் வியர்வை சுரப்பிகள் அழுது தீர்க்க தொடங்கிவிட்டன.. வெளியில் இப்படி என்றால், வீட்டினுள் கேட்கவே வேண்டாம்.. எட்டாவது மாடியில் கிழக்கு, மேற்கு என இரண்டு பக்கங்களிலும், மொத்தமாக நான்கு சன்னல்களுக்கு நடுவே நான் அடைந்திருப்பதால், காற்று முதலில் என் உரோமங்களுடன் கைகுளுக்கிய பின்தான் கீழிறங்கும்.. ஆனால் இன்று அந்த உரோமத்திற்கு கூட.. சாரி.. சூடான காற்றுக்கு கூட வழியில்லை.. இறுக்கமாக இருக்கிறது..  என்னதான் கேட்ஜட்களிடம் என் மனதை, முன்பணம் இல்லாமலேயே வாடகைக்கு கொடுத்திருந்தாலும், இந்த குளிரூட்டிகளை மட்டும் ஏற்கமுடியவில்லை.. காரணம், இரவில் அதன்துணையுடன் தூங்கிவிட்டு காலையில் வெளியில் வரும்பொழுது, இந்த உலகமே என்னை வெறுத்து வெப்பதை என் மேல் உமிழ்ந்து உடல்முழுவதும் நீர் கடுப்பு ஏற்படுவதுபோல் இருக்கும்.. ...

சாங்வான் குறிப்புகள் #06 (மால(ர)தாங்..)

படம்
பர்சனலைசுடு மெடிசன்- தனிப்பயனாக்கப்பட்ட மருந்து என்றொரு புது வகையொன்று வளர்ந்துவருகிறது.. இதைப்பற்றி முன்பே ஒரு முறை எழுதியிருந்தேன்.. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், அலோபதி மருந்துகள் பொதுவாக மேற்கத்தியர்களுக்கான மரபணுக்கு ஏற்றவாறே வடிவமைக்கப்பட்டிருப்பதால், அவற்றில் பெரும்பாலான மருந்துகள் நம்மவர்களுக்கு அதே மாதிரியான பயனை கொடுப்பதில்லை.. சில வேளைகளில் மோசமான பக்கவிளைவுகளையும் கொடுக்கவல்லது. கவனாக வாசியுங்கள்.. எங்கே கவனமாக வாசிக்கிறீர்கள்..! கவனமாக என்பதற்கு கவனாக என்று எழுதியிருந்தேன்.. சரி, இனி கவனமாக வாசியுங்கள்.. பக்கவிளைவுகள் என்று நான் குறிப்பிடுவது, பொதுவான பக்கவிளைவுகள் அல்ல, குறிப்பிட்ட மரபணு தொடரை கொண்டவர்களுக்கு ஒவ்வாமல் போவதால் வரும் பிரச்சனை. இதனை கருத்தில் கொண்டு, ஆய்வாளர்கள், மருத்துவர்கள் என பலர் தனிப்பயனாக்கப்பட்ட மருந்துகளை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறார்கள்.. கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் மருந்தகத்திற்கு செல்கிறீர்கள், அங்கு உங்களுக்காகவே கொடுக்கப்பட்ட ஒரு மருத்துவ ஆதாரை காண்பிக்கிறீர்கள், அதற்கு ஏற்றவாறு ஒரு எந்திரம் உங்களுக்கான மருந்தை சுடச்சுட சம...

இப்படி ஏன் நம் பள்ளிகள் மாற்றப்படவேண்டும்

படம்
இப்படி ஏன் நம் பள்ளிகள் மாற்றப்படவேண்டும் என சிந்தித்துப்பார்த்தேன்.. நான் பள்ளியில் படிக்கும் காலங்களில், நெட்டிலிங்க மரத்தடியிலும் (இதை அசோக மரம் என்கிறார்களே, உண்மையா?), வாதாமரத்தடியிலும்தான் பெரும்பாலும் வகுப்புகளும், தேர்வுகளும் நடக்கும்.. குறிப்பாக, தமிழ் பருவத்தேர்வுகள் அப்படியான மரத்தடி நிழலில், காக்காவின் எச்சத்திற்கு பயந்தும், பதிலைத்தேடியும் மரக்கிளைகளை பார்த்தவண்ணம் நடந்தேறும்.. கீழே இணைக்கப்பட்டுள்ள படம், சப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பூங்காவில் எடுத்தது.. இது ஒரு வகுப்பறையில்லை.. ஆனால், சப்பானிய மொழியில் வெளிவந்து, உலகம் முழுவதும் மக்களால் வாசித்து கொண்டாடப்பட்ட ஒரு நூல் டோட்டோ-சான் - சன்னலில் ஒரு சிறுமி.. அந்த நூலின் நினைவைக்கொடுத்தது இந்தப்படம்.. சப்பானிய மொழியில், இந்த நூலை எழுதியவர் நலமுடன் டெட்சுகோ குரோயாநாகி (திருமண பத்திரிக்கையில் எழுதுவார்களே.. நலமுடன் - உயிரோடு இருக்கிறார் என்ற அறிவிப்பு).. அவரின் வயது இப்பொழுது 95ஐ நெருங்கும் என நினைக்கிறேன்.. அவரின் சிறுவயதில் டோட்டோ-சான் என்றே அழைக்கப்பட்டிருக்கிறார்.. அவரின் பெயரான டெட்சுகோ என்பதை சொல்லத்தெரியாத சப...

மAIத்துனன் அலப்பறைகள்

  நண்பர் ஒருவர் தனி செய்தியில் வந்தார்.. அவரை நான் இதற்கு முன்பு சந்தித்த ஞாபகம் இல்லை.. அதனால், Have we met anytime? என்று கேட்டு தட்டச்சினேன்... ஆனால், அருகில் இதை கவனித்துக்கொண்டிருந்த என்னுடைய மைத்துனன், இதை இப்படி கேட்கக்கூடாது மச்சி என்றான்... சரி எப்படி கேட்கவேண்டும் என அவனிடம் வினவியபோது, Do you know if we've met anytime? என்று கேள், என்றான்.. நானும் அப்படியேதான் செய்தேன்.. அவனுக்கு என்னைவிட ஆங்கிலம் அத்துப்படி.. ஆங்கிலம் மட்டுமல்ல, அனைத்துமே.. சிறிது நேரம் அவனை, இவ்ளோ நாளு எங்க இருந்த நீ.. என்றவாறு மெய்சிலிர்த்து பார்த்துவிட்டு, அந்த செய்தியை, அந்த நண்பருக்கு அனுப்ப முற்பட்டேன்.. இரு இரு.. இத இன்னும் சரிப்படுத்தலாம்.. என்றான் மைத்துனன்.. எப்படி? என்றேன்.. இதை, Do we have met anytime? என்று மாற்றிவிடு என்றான்.. நானும் அப்படியே செய்தேன்... இப்பொழுதும் அதே மெய்சிலிர்ப்புடன் கூடிய ஒரு பார்வையை வீசினேன்.. இன்னும் உற்சாகமான அவன், இதுவும் வேண்டாம் என, Would you happen to know if we have met anytime? என்று மாற்றிவிடு என்றான்.. அதே சிலிர்ப்பு.. ஆனால் இப்பொழுது கொஞ்சம் வெறுப்பும் ஒட...

கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்

படம்
  நாட்குறிப்பை பதிவு செய்கிறேனோ இல்லையோ , நாட்குறிப்பேட்டை மட்டும் அழகானதாக வாங்கிவைத்துக்கொள்வது என்னுடைய வழக்கம்.. இந்தப் பழக்கம் , என்னுடைய நண்பன் வினோவிடமிருந்து வந்தது.. டிசம்பர் வந்துவிட்டால் போதும் , மொத்த தஞ்சாவூரையும் அலசி ஆராய்ந்து , குறைந்தது இரண்டு மூன்று நாட்குறிப்பேட்டையாவது வாங்கிவிடுவான்.. தாத்தாவிற்கு ஒன்று , எனக்கொன்று , என.. அவனுடைய கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும்.. எத்தனை பாடுபட்டும் , அந்த கையெழுத்து எனக்கு வாய்க்கவில்லை.. கையெழுத்தில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.. அந்த நாட்குறிப்பை எழுதிவிட்டு , என்னுடைய கையெழுத்தை இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னாலேயே வாசிக்கமுடியாது என்பதை நினைக்கையில் , அந்த நாட்குறிப்பேடு இரண்டு நாட்களுடன் தன் வாழ்வின் பலனை முழுவதும் பெற்றுவிட்டதைப்போல , வெற்று காகிதமாகவே எஞ்சி நின்றுவிடும்.. பின்னர், ஆண்டு பொறிக்கப்பட்ட அந்த குறிப்பேட்டின் பக்கங்கள், தனக்கு தொடர்பே இல்லாத ஒரு அண்டின் நாட்களில் நடக்கும் செல்வுகளையும் அதன் கூட்டுத்தொகையையும் தாங்கி நிற்கும்.. பிற்பாடு , கையெழுத்து சரியில்லை என்றாலும் எழுதலாமே என்று தவறா...

சாங்வான் குறிப்புகள் #05

 குவான் என்றொரு நண்பர் கொரியாவில் எனக்கு உற்ற தோழராக இருந்திருந்தார். இதேபோலொரு ஆண்டு தொடக்கத்தின்பொழுதுதான், சரியாக சொல்லவேண்டுமானால், 2012ஆம் ஆண்டு, ஜனவரி மாதம்தான் அங்கு என் கால் தடத்தை, இல்லை இல்லை.. வுட்லேண்ட் ஷூவின் தடத்தை பதியவைத்திருந்தேன். அப்படி ஒரு ஷூவை எனக்கு அறிமுகப்படுத்தியது அந்த கொரிய பயணம்தான்.. என்னை வரவேற்க வந்த ஹன் ஜூ வூ என்ற பெண்ணும், அவரின் தோழியும், என்னிடம் கந்தி என்ற சொல்லைத்தவிர வேறு ஏதும் சொல்லவில்லை.. பின்புதான் அவர்களுக்கு ஆங்கில சொற்கள் வாயில் நுழையாது, நுழைந்தாலும் வெளியில் வராது எனத்தெரிந்துகொண்டேன்.. அன்றிலிருந்தே நான் ஒரு ஆங்கிலேயனாய் என்னை உணர்ந்துகொள்ள தொடங்கிவிட்டேன், அது வேறு கதை... பின்னொரு நாளில்தான், அன்றுவரை கந்தி என்பது கொரிய சொல் போல என நினைத்துக்கொண்ட எனக்கு பேரிடி விழுந்தது.. என்னுடைய பெயரின் பின்னொட்டாக இருக்கும் எனது அப்பாவின் பெயரான காந்தி என்பதைத்தான் அப்படி சொல்லியிருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட பொழுது எனக்கு கொரியாவில் வயது மூன்று மாதங்கள் ஆகிவிட்டன... தவழமுடியா வயதானாலும், அந்த கொரிய தோழனின் உதவியால் தவழ அல்ல, எழுந்து ஓடகூட செய்...

சாங்வான் குறிப்புகள் #04

When Life Gives You Tangerines, என்ற கொரிய இணைய தொடருக்கு மனதை பறிகொடுத்தோர் பட்டியலில் என் பெயரும் உண்டு..  கதை ஜேஜு என்ற கொரிய தீவு ஒன்றில்தான் தொடங்கும்.. கடலில் மூழ்கி மூச்சுபிடித்து சிப்பிகளை எடுத்துவரும் அம்மா, தன் மகள் எப்படி வளரவேண்டும் என நினைக்கிறாள், மகள் அம்மா நினைத்தபடி எப்படி வளர்கிறாள் என்பதே மொத்த கதையும்.. அம்மா இறந்து, மகள் அம்மாவாகி, பாட்டியாகி, கடைசி காலம் அவளின் கவிதை தொகுப்பு வெளிவரும் வரை நீளும்.. ஜேஜுவில் தொடங்கும் கதை, சியோல்வரை நடந்தே பயணிக்கும் என்றாலும் பயணம் முழுவதும் அவ்வளவு இனிமையானதாக இருக்கும்..  கொரிய தஞ்சை சாங்வானில் இருந்து நாற்பது கிலோமீட்டர் சாலை வழி பயணித்து, ஒரு மணிநேரம் விமானத்தில் பயணித்தால், அந்த ஜேஜு தீவை அடைந்துவிடலாம்.. பல தீவுகள் கொரியாவை சுற்றி இருந்தாலும், ஜேஜுதான் இருப்பதிலேயே பெரிய தீவு.. அதுமட்டுமே சிறப்பென்றில்லை.. அந்த தீவே எரிமலை படிமங்களால் ஆனது என்பது அதன் மிகமுக்கிய சிறப்பு.. குறுக்கும் நெடுக்குமாக சாலை வழியில் ஒரு மணிநேரத்திற்கு மேல் பயணிக்க மேலும் சாலையில்லை என்றாலும் ஐந்தாறு நாட்கள், தூக்கமின்றி அலைந்தாலும், அனைத்து ...