இப்படி ஏன் நம் பள்ளிகள் மாற்றப்படவேண்டும்
இப்படி ஏன் நம் பள்ளிகள் மாற்றப்படவேண்டும் என சிந்தித்துப்பார்த்தேன்.. நான் பள்ளியில் படிக்கும் காலங்களில், நெட்டிலிங்க மரத்தடியிலும் (இதை அசோக மரம் என்கிறார்களே, உண்மையா?), வாதாமரத்தடியிலும்தான் பெரும்பாலும் வகுப்புகளும், தேர்வுகளும் நடக்கும்.. குறிப்பாக, தமிழ் பருவத்தேர்வுகள் அப்படியான மரத்தடி நிழலில், காக்காவின் எச்சத்திற்கு பயந்தும், பதிலைத்தேடியும் மரக்கிளைகளை பார்த்தவண்ணம் நடந்தேறும்.. கீழே இணைக்கப்பட்டுள்ள படம், சப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பூங்காவில் எடுத்தது.. இது ஒரு வகுப்பறையில்லை.. ஆனால், சப்பானிய மொழியில் வெளிவந்து, உலகம் முழுவதும் மக்களால் வாசித்து கொண்டாடப்பட்ட ஒரு நூல் டோட்டோ-சான் - சன்னலில் ஒரு சிறுமி.. அந்த நூலின் நினைவைக்கொடுத்தது இந்தப்படம்.. சப்பானிய மொழியில், இந்த நூலை எழுதியவர் நலமுடன் டெட்சுகோ குரோயாநாகி (திருமண பத்திரிக்கையில் எழுதுவார்களே.. நலமுடன் - உயிரோடு இருக்கிறார் என்ற அறிவிப்பு).. அவரின் வயது இப்பொழுது 95ஐ நெருங்கும் என நினைக்கிறேன்.. அவரின் சிறுவயதில் டோட்டோ-சான் என்றே அழைக்கப்பட்டிருக்கிறார்.. அவரின் பெயரான டெட்சுகோ என்பதை சொல்லத்தெரியாத சப...