தமிழ், தமிழன், தமிழின் வரலாறு: தமிழ்: இசைக்கு ஒரு மொழி இசைக்கும் ஒரே மொழி கற்காலத்திலும், தற்காலத்திலும் மானுடன் விழிகண்ட ஒரே பொற்கிழி! தமிழன்: தலைவனிழந்து தறுதலையிடம் தலைதாழ்ந்த ஒரே தமையன்! முன்னவன் சாமானியனாயினும் தேகம் மண்ணுண்டதும் நடுகல்லென கடவுளாக்கப்பட்டவன், பின்னவன் வாகை சூடியவனாயினும் வாடைக்கடவுளுக்கும் வெண்நூல் மாக்களின் சாதிக்கும், மதத்திற்கும் இரையாக்கப்பட்டவன்! தமிழின் வரலாறு: பதிவுகளற்ற படிமங்களின் எச்சங்கள்! மலையாளிக்கு அது ஒரு திரிப்புக்குள்ளாகும் தின்பண்டங்கள்! பாரதத்திற்கு அது ஒரு மறைக்கப்படவேண்டிய மந்திரங்கள்! உலகிற்கு அது ஒரு உற்றுநோக்கப்பெறா உண்மைகள்! தமிழனுக்கு அது ஒரு மறக்கப்படவேண்டிய மதிப்புகள்! எனவேதான் தமிழன் மதிப்பையும் அடையாளத்தையும் இழந்த அகதிகள் என்றானான்! தமிழனும், தமிழும் எழ வேண்டும்!!!
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
விளையாட்டாக சொல்கிறேன் #18
வாழ்கையை ஒரு பயணமாகத்தான் பெரும்பாலும் உருவகித்துக்கொள்கிறோம் காரணம், நேரமென்ற நான்காது பரிமாணத்தை நம்மின் முப்பரிமாண காட்சிகள் கடந்துசெல்வதால்தான். ஆனால் நம் வாழ்வு, அந்த நான்காவது பரிமாணத்தில் முன்னோக்கி மட்டுமே செல்லப் பழக்கப்பட்டிருக்கிறது. அதாவது முன்னோக்கி பாய்ந்து செல்லும் ஒரு தொடர்வண்டியைப்போல. அந்த வாழ்வென்ற தொடர்வண்டியின் கடைசிப்பெட்டியில் பயணப்படுவதுதான் நம்மின் நினைவுகள். அது முன்னோக்கி செல்லும் தொடர்வண்டியுடனேயே இணைந்திருந்தாலும், பின் கடந்துவந்த பாதையையும் பார்த்துக்கொண்டேதான் வரும். வாழ்வை தாங்கி நகர்த்திசெல்லும் நேரமென்ற இரும்பு பாதையை அசையாது தாங்கி நிற்கும் அன்பென்ற சிறுகற்கள் பாதைநெடுகிலும் இறைந்து கிடக்குமே, அந்த அன்பு செலுத்தியவர்கள் பலராலும் கட்டமைக்கப்பட்டதுதான் இந்த வாழ்வென்ற பயணம். பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த அந்த சிறுவனான என்னை அடித்தவண்ணம் தரதரவென கப்பி சாலையில் இழுத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தார் அப்பா. சிங்கபூரிலிருந்த வந்திருந்த மாடிவீட்டு தாத்தாதான், கடவுளாக என்னைக் காத்து பள்ளிக்கு கொண்டுவந்து சேர்த்திருந்தார். பல நாட்களாக பள்ளிக்கு செல்லவே கசந்த நிலையி
விளையாட்டாக சொல்கிறேன் #17
பழைய மரத்தாலான கேன்வாஸ் ரக சாய்வு நாற்காலி ஒன்றில் கால் மீது கால் போட்டு, நடு வகுடெடுத்த தலையில் வெள்ளி இழைகள் முட்டிமோதி மேலெழுந்து அசைந்துகொண்டிருக்க, வலது கை கடிகாரம் ஆடும் படி கையை அசைத்து அசைத்து எதையோ நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் தாத்தா. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, கீற்று மட்டைகள் வேய்ந்த மாடியில், தென்னங்காற்றில் கரைந்துகொண்டே இந்த காட்சிகள் நடந்திருக்கலாம் என அவதானிக்கிறேன். அவரின் பேச்சின் இடையே, அவர் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியை அவரின் நண்பர்கள் பெரிதாக கவனித்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அவர் இறந்த பிறகு அவர் அமர்ந்திருந்த அந்த சாய்வு நாற்காலி அவரைப்பற்றி நினைவுகளை உரக்க சொல்லிக்கொண்டே இருந்தது. 'பெரும்பாலும் உங்க தாத்தா, கேன்வாசுலதான் தூங்குவார், அப்படி தூங்கயில நாய் கட்டிலுல தூங்கும், தாத்தா கட்டிலுல தூங்குனார்னா, நாய் கேன்வாசுல படுத்திருக்கும்' என்று வடக்கு வீட்டு பெரிய அண்ணன், அந்த கேன்வாசிற்கும், தாத்தாவிற்கும் இடையே நாயின் அன்பு எப்படி பரவிக்கிடந்தது என்பதை பலதடவை சொல்லியிருக்கிறார். எத்தனை திருமண பேச்சுகளையும், சொத்து தகராற
nantru....
பதிலளிநீக்குஅருமையாகச் சொன்னீர்கள்!
பதிலளிநீக்குநன்றி தோழரே...!
நீக்கு