பெண் ஒரு தனி இனமல்ல, இம்மனித இனத்தையே உருவாக்கும் மனிதக்கடவுள்.

ஆபாச பாடலுக்கு எழுந்த கடும் எதிர்ப்பலைகளை பற்றியும், அதைத்தொடர்ந்து தற்பொழுது நடந்துகொண்டிருக்கும் சட்டநடவடிக்கைப் பற்றியும் அனைவரும் அறிவோம். ஆனால் இவ்வாறான எதிர் வினைகள் மக்களிடம் ஏதேனும் மாற்றத்தை உண்டுபண்ணுமா என்றால் பதில் பண்ணாது என்பதாகவே இருக்க முடியும். எனில் இதற்கான தீர்வு என்ன? தண்டனையா? அப்படியே தண்டித்துவிட்டால் தீர்வு கிடைத்துவிடுமா?

தீர்வினை, இதுபோன்ற பெண்களுக்கெதிரான வன்முறைகள் எதனால் நடக்கிறது? அதற்கான மூலக்காரணம் என்ன? அதனை எவ்வாறு தடுக்கலாம்? பொன்ற அடிப்படை கேள்விகளுடன் துவங்க வேண்டும். முதலில் இந்த வன்முறை செயல்கள் நடப்பதற்கான காரணம் பெண்ணைப் பற்றியும், பாலியல் பற்றியும் ஆணுக்கு சரியான புரிதல் இன்மை என்பதால்தான் என்றாலும், இதனுடன் சேர்த்து பார்க்க வேண்டிய மற்றொரு விடயமும் உண்டு அதுதான் நம் சமூகத்தில் இருக்கும் இச்சையை தணிப்பதில் நிலவும் வறட்சி. காம இச்சை - இயற்கை. இதனை தணிக்க சிலர் ஆன்மீகத்தையோ, உடற்பயிற்சியையோ நாடலாம். ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமன்று. எனவே அதீதமாய் ஏற்படும் இச்சையை தணிக்க வழியின்றி மனதளவில் பாதிப்படைகிறது நம் சமூகம். இவ்வாறான பாதிப்புடனேயே ஒரு பெண்ணை எதிர்கொள்கிறது இச்சமூகம். பெண் போகப்பொருளாகவே மாறிப்போனதன் காரணமும் இதுவே. தன்னை மனிதனாக பார்க்காது வெறும் பொருளென நினைக்கும் ஆண்களிடத்திலிருந்து தம்மை காத்துக்கொள்ளவே 'ஒரு 60 வயதை கடந்த பெண்கூட பேருந்து இருக்கையில் தன் மகன் வயதுடைய ஆணின் அருகில் அமர மறுக்கிறார்'.

இதனையெல்லாம் மாற்றியமைக்க வெறுமனே சடங்கு, சம்பிரதாயங்களை களைந்து பயனில்லை, கூடவே ஆண், பெண் பேதம் கற்பிக்கும் அடிப்படை கூறுகளை தகர்த்து, நல்ல பாலியல் கல்வியினை மாணவர்களுக்கு கொடுக்கும் பொழுது மட்டுமே சாத்தியப்படும்.
பெண் வயதைப்பொருத்து பேதையாக இருக்கலாம், ஒருபொழுதும் போதையாக இருக்கமுடியாது.

சக்தி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #18

விளையாட்டாக சொல்கிறேன் #10