தமிழ், தமிழன், தமிழின் வரலாறு: தமிழ்: இசைக்கு ஒரு மொழி இசைக்கும் ஒரே மொழி கற்காலத்திலும், தற்காலத்திலும் மானுடன் விழிகண்ட ஒரே பொற்கிழி! தமிழன்: தலைவனிழந்து தறுதலையிடம் தலைதாழ்ந்த ஒரே தமையன்! முன்னவன் சாமானியனாயினும் தேகம் மண்ணுண்டதும் நடுகல்லென கடவுளாக்கப்பட்டவன், பின்னவன் வாகை சூடியவனாயினும் வாடைக்கடவுளுக்கும் வெண்நூல் மாக்களின் சாதிக்கும், மதத்திற்கும் இரையாக்கப்பட்டவன்! தமிழின் வரலாறு: பதிவுகளற்ற படிமங்களின் எச்சங்கள்! மலையாளிக்கு அது ஒரு திரிப்புக்குள்ளாகும் தின்பண்டங்கள்! பாரதத்திற்கு அது ஒரு மறைக்கப்படவேண்டிய மந்திரங்கள்! உலகிற்கு அது ஒரு உற்றுநோக்கப்பெறா உண்மைகள்! தமிழனுக்கு அது ஒரு மறக்கப்படவேண்டிய மதிப்புகள்! எனவேதான் தமிழன் மதிப்பையும் அடையாளத்தையும் இழந்த அகதிகள் என்றானான்! தமிழனும், தமிழும் எழ வேண்டும்!!!
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
விளையாட்டாக சொல்கிறேன் #18
வாழ்கையை ஒரு பயணமாகத்தான் பெரும்பாலும் உருவகித்துக்கொள்கிறோம் காரணம், நேரமென்ற நான்காது பரிமாணத்தை நம்மின் முப்பரிமாண காட்சிகள் கடந்துசெல்வதால்தான். ஆனால் நம் வாழ்வு, அந்த நான்காவது பரிமாணத்தில் முன்னோக்கி மட்டுமே செல்லப் பழக்கப்பட்டிருக்கிறது. அதாவது முன்னோக்கி பாய்ந்து செல்லும் ஒரு தொடர்வண்டியைப்போல. அந்த வாழ்வென்ற தொடர்வண்டியின் கடைசிப்பெட்டியில் பயணப்படுவதுதான் நம்மின் நினைவுகள். அது முன்னோக்கி செல்லும் தொடர்வண்டியுடனேயே இணைந்திருந்தாலும், பின் கடந்துவந்த பாதையையும் பார்த்துக்கொண்டேதான் வரும். வாழ்வை தாங்கி நகர்த்திசெல்லும் நேரமென்ற இரும்பு பாதையை அசையாது தாங்கி நிற்கும் அன்பென்ற சிறுகற்கள் பாதைநெடுகிலும் இறைந்து கிடக்குமே, அந்த அன்பு செலுத்தியவர்கள் பலராலும் கட்டமைக்கப்பட்டதுதான் இந்த வாழ்வென்ற பயணம். பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த அந்த சிறுவனான என்னை அடித்தவண்ணம் தரதரவென கப்பி சாலையில் இழுத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தார் அப்பா. சிங்கபூரிலிருந்த வந்திருந்த மாடிவீட்டு தாத்தாதான், கடவுளாக என்னைக் காத்து பள்ளிக்கு கொண்டுவந்து சேர்த்திருந்தார். பல நாட்களாக பள்ளிக்கு செல்லவே கசந்த நிலையி
ஒரு ஆடு நரியான கதை..
ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம்... அப்பா, இந்த கதைய நீங்க முன்னாடியே சொல்லிட்டீங்களே.. இது வேற ஊரு, வேற நரி.. சரி சரி.. அந்த நரிக்கு தொப்பை பசி வந்துடுச்சி.. பசி எடுக்காத போதே ஹாபிக்காக வேட்டையாடும் மிருகம் நரி.. பசி எடுத்தா என்ன பண்ணும்... தூங்கிடுமா!? யாரா இருந்தாலும் பசி எடுத்தா சாப்பாட தேடி ஓடுவாங்க அதுதான் இயற்கை.. தூக்கமெல்லாம் வராது.. அதனால நரி என்ன பண்ணும்னா, கண்மூடித்தனமா வேட்டையாட கிளம்பிடும்.. அப்படி சிவந்த கண்களுடனும், வெற்று வயிற்றுடனும் வேட்டையாட கிளம்பிய நரி கொஞ்ச தூரத்தில் ரெண்டு ஆட்டு குட்டிகள பார்த்துவிட்டது.. அப்போ அந்த நரி பயந்து ஓடிடுமா.. ஏன்னா ஆட்டுகுட்டி ரெண்டு இருக்கு, நரி ஒன்னுதான.. அடேய், அப்ரசன்டி.. நீயே மீதி கதைய சொல்லுடா.. அப்பறம் என்ன நரி தல தெரிக்க ஓடிப்போயி அவங்க அப்பா அம்மா எல்லாரயும் கூப்டு வந்துருக்கும்.. அப்படிதான் இல்ல.. இதுதான் இயற்கையோட விளையாட்டே.. ஆட்டுகுட்டிக்கு நரிய விரட்டும் அளவுக்கு உடலில் வலிமை இருந்தாலும், மன வலிமை சுத்தமா கிடையாது.. அதனால ஆட்டுக்குட்டி நரிக்கு விருந்தாகிவிடும்.. அச்சோ.. ஆமா, அந்த நரி ரெண்டு ஆட்டுக்குட்டிகள்ல ஒன்ன புடிச்சிக
nantru....
பதிலளிநீக்குஅருமையாகச் சொன்னீர்கள்!
பதிலளிநீக்குநன்றி தோழரே...!
நீக்கு