இடுகைகள்

ஜூலை, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலக மக்களுக்கு சோறிட சேற்றில் இறங்கும் விவசாயியின் தற்கொலை எதை உணர்த்துகிறது நமக்கு.... ?-ஒரு சாதாரணனின் பார்வையில்..

இதுவரை ஆட்சி செய்த அல்லது இப்பொழுது ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற அரசின், விவசாயியின் மீதான அக்கறை என்ன..?! ஆந்திர மாநிலத்தில், விவாசாயி ஒருவர், தன் மகன் பயிலும் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அங்கு படித்துக்கொண்டிருந்த தனது மகனை அழைத்து சென்று ஒரு தேநீரும், ரொட்டியும் வாங்கிக் கொடுத்து உண்ணசொல்லிவிட்டு, அவன் கையில் ஐந்து ரூபாயையும் கொடுத்திருக்கிறார். பின் அவனை, அந்த பள்ளியிலேயே விட்டுவிட்டு, அவனிடம் நன்றாக படிக்கவேண்டும் என அறிவுரை கூறிய அவர், எக்காரணம் கொண்டும் நான் இதுவரை செய்துகொண்டிருந்த 'விவசாய' தொழிலுக்கு வந்துவிடாதே என்று தன் விரக்தியை மகனிடம் புலம்பியிருக்கிறார். கடைசியில் அவர் தன் வீட்டிற்கு சென்று தன்னையே கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை, நம் மூளைக்கு எந்த புரிதலை கொடுக்கிறது.  அரசின் மோசமான கொள்கைகளும், கொள்ளைகளுமா? அரசு என்ன செய்தாலும், அவர்களுக்காய் கொடிபிடிக்கும் அப்பாவி மக்களை பற்றியா? அடுத்து ஐந்து வருடங்கள் அவர்கள் செய்யப்போகும் கொள்கை பிடிப்பான கொள்ளைகளுக்காய், ஓட்டுக்கு பணம்பெருபவர்களைப் பற்றியா? நடிகர், நடிகைகளுக்காய் கால்கடுக்க நின்று பேட்டி எடுக்
மலையாளம்- உயிர்நாடி 'தாய் தமிழ்' வழியமைந்த  திராவிட மொழிகளுல்- 'பிரிந்துசென்ற பிராந்திய மொழியாயினும்', உயர்வான, இனிமையான மொழிதான்... ஆனால் தன் தாய்-யை  மறந்தவொரு  மொழியாய்  மாறிப்போனது, காலத்தின் கட்டாயமோ- இல்லை  அரசியலின் சூழ்ச்சியோ  தெரியாது அவர்களுக்கும்...! கட்டற்ற களஞ்சியமாய் வார்த்தைகள்  தமிழெங்கும் கொட்டிக்கிடக்க, இவர்கள் சமஷ்கிருதம்  போவதன் நோக்கம்  தெரியாது அவர்களுக்கும்....! தமிழ் மறந்த அவர்கள், அவர்களுக்கு படியளக்கும்  தமிழர்களையும்  மறக்க-  இல்லை, இல்லை  அடக்க நினைக்கிறார்கள்...! உங்கள் தகதகக்கும் தேநீரும்,  பளபளக்கும் தங்கமும் பொலபொல புட்டும்  விற்பனையாக  தமிழர்கள் வேண்டும், அன்றாட காய்கறிகள்,  உணவுபொருட்கள்  தமிழகத்திலிருந்து வேண்டும், மின்சாரமும் வேண்டும்...! ஆனால் தமிழன் மட்டும் வேண்டாம்!!??? முல்லை பெரியாற்றை,  நீதிமன்றம் சொன்னாலும் விடமாட்டீர்கள்...!??! இதற்கெல்லாம் காரணம்,  தமிழகத்தில் வாழும் மலையாளி மலையாளியாகவே வாழ்வதும், தமிழன் எங்கு சென்றாலும்  தமிழை மறுப்பதும் தான்... எனில்  இப்பொழுதும் தமிழர்கள் என்ன செய்
அறிவியலாளர்களின் 'h-index'-யை எப்படி கணக்கிடுவது....? உங்களின் மொத்த கட்டுரைகளில் (published articles), எத்தனை எண்ணிக்கையிலான உருப்படிகள், அது பெற்றுள்ள 'மேற்கோள்'களின் (citation) எண்ணிக்கைக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கறதோ, அதுவே உங்களின் h-index-ஆக அமையும்... எடுத்துக்காட்டாக, நீங்கள் இதுவரை 20 கட்டுரைகளை பிரசுரித்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அதில் 5 கட்டுரைகள் தலா 10 முறை மேற ்கோள்கள் பெற்றதாகவும், 3 கட்டுரைகள் தலா 9 முறை மேற்கோள்கள் பெற்றதாகவும், 5 கட்டுரைகள் தலா ஒரு முறை மேற்கோள்கள் பெற்றதாகவும், மற்றவை இன்னும் மேற்கோள்கள் பெறவில்லை என்றும் வைத்துக்கொள்வோம்.., இதில், அதிக எண்ணிக்கையிலான மேற்கோள் '10', ஆனால் உங்கள் கட்டுரைகளில் 5 இல் மட்டுமே '10' மேற்கோள்கள் உள்ளன, அடுத்த எண்ணான '9'-க்கும் வாய்ப்பில்லை, ஏனெனில் '9' மற்றும் '9' க்கு மேற்பட்ட மேற்கோள்கள் பெற்ற கட்டுரைகளின் எண்ணிக்கை '8' மட்டுமே. எனில், '8'-யை எடுத்துக்கொள்வோம், '8' மற்றும் '8' க்கு மேற்பட்ட மேற்கோள்கள் பெற
தேவை, கனவான அவலம்... -தமிழீழம், தமிழர்களின் கனவாய் மாறும் அவலம் -இறந்த லட்சகணக்கான தமிழர்களுக்கு ஞாயம் கிடையாது -மீனவர்கள் விவகாரத்திலும் தமிழர்களுக்கு எதிரான அணுகுமுறை -மலையாளிகளுக்கு தமிழனிடமிருந்து மின்சாரம் வேண்டும், உணவு வேண்டும், தன் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வேண்டும். ஆனால் தமிழனுக்கு தண்ணீர் மட்டும் கிடையாது -கர்நாடகாவிலிருந்து காவிரிக்கு சொட்டு தண்ணீரும் பெறமுடியாது -மீத்தேன், அணுஉலை, நியூட்ரினோ, இன்னும் பல சுடுகாடுகளை தமிழன் தலையில் கட்டும் திட்டம் -தமிழின் தொன்மத்தையும், அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளையும் உலகநாடுகளுக்கும், ஏன் தமிழர்களிடையேயே மறைக்கும் ஹிந்தி(இந்திய) வெறியர்கள், இதற்கிடையே ஹிந்தி திணிப்பு வேறு...!! இதற்கெல்லாம் தீர்வு- நமக்கான தனி தாய்தமிழ் தேசம்... எல்லா சிறப்புகளும், தேவைகளும் இருந்தும் தனி தமிழ்தேசியம் கனவாகவே மாறிப்போனதன் காரணம், தமிழ் இன-உணர்வாளர்களை விட இங்கு இன-துரோகிகள் அதிகமாய் முளைத்து, வளர்ந்து, காடாகியிருப்பதே...!! அவர்களை முளையிலேயே அழிக்காமல் விட்டது தமிழர்களின் பெருந்தன்மை...! -ஆனால் என்ன செய்ய, இப்போழுது அந்த பெரு